நடிகை சன்னி லியோனிற்கு மீண்டும் திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்! அவரே சொன்னது என்ன தெரியுமா?
பாலிவுட் நடிகை சன்னி லியோன் அவரது கணவரை மீண்டும் திருமணம் செய்துள்ளார். அவரகளது மூன்று குழந்தைகளின் முன்னிலையில் மாலத்தீவில் வைத்து திருமணம் நடைபெற்றதாக இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்டுள்ளார்.

சன்னி லியோனின் இயற்பெயர் கரெஞ்சித் கவுர் வோரா ஆகும். இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார். இவர் முதன் முதலாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஜிஸ்ம் 2 என்ற திரைப்படம் மூலம் பாலிவுடில் அறிமுகமானார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது. ஹிந்தி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் வலம்வந்த இவர், 2014-ம் ஆண்டு தமிழில் வடகறி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். பின்னர் இவர் தமிழில் வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இவர் திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சியிலும் தொகுப்பாளர், செய்தியாளர், போட்டியாளர் என நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் 2011-ம் ஆண்டு பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
தற்போது நடிகை சன்னி லியோன் அவரது கணவரை மீண்டும் திருமணம் செய்துள்ளார். அவர்களது மூன்று குழந்தைகளின் முன்னிலையில் மாலத்தீவில் வைத்து திருமணம் நடைபெற்றதாக இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்டுள்ளார். இவரது திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய திரையுலகில் சென்சேஷனல் ஹீரோயினாக இருப்பவர் தான் சன்னி லியோன். இவர் முன்னதாக பார்ன் படங்களில் நடித்து வந்தார். பின்னர் அதிலிருந்து முற்றிலும் வெளியேறி இந்தி படங்களில் நடித்து வந்தார். இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.