'யூனிட்டி.. மண்ணாங்கட்டி' சாச்சனாவை வறுத்தெடுத்த சுனிதா.. பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ச்சையை கிளப்பும் பேச்சு..
பிக்பாஸ் வீட்டிலுள்ள பெண்கள் அணியில் வீக்காக உள்ள போட்டியாளர்கள் குறித்து சாச்சனா அவர்களிடம் எதுவும் கூறாமல் இருப்பது ஏன் என சுனிதா கடுப்பாக பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு 24 மணி நேரத்திற்குள்ளாகவே வெளியேற்றப்பட்ட சாச்சனா, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த போட்டியாளர்கள் அவரிடம் நிகழ்ச்சி குறித்து மக்கள் வெளியே என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.
பின், வீட்டில் யார் எப்படி விளையாடுகிறார்கள், பிக்பாஸ் வீட்டில் உண்மையாக இருப்பது யார்? போலியாக இருப்பது யார்? என்பது குறித்தும், ஆண்கள் அணி நடத்திய பிராங் மற்றும் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பேசப்பட்டது.
சாச்சனாவால் உண்டான சர்ச்சை
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் அணியில் அன்ஷிதா, சௌந்தர்யா, சுனிதா ஆகிய 3 போட்டியாளர்களும் மிகவும் வீக்காக விளையாடி வருகின்றனர். அவர்கள் மீது மக்களின் செல்வாக்கு குறைந்துள்ளது என சாச்சனா, ஃபேட் மேன் ரவிந்தரிடம் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்து எந்தவித கருத்துகளையும் பெண்கள் அணியில் கூறாமல் இருந்துள்ளார்.