Sundar C Speech: ‘உதயநிதிக்கு பிடிக்காத கதையில் ஹிட் அடித்தேன்’ -சுந்தர் சி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sundar C Speech: ‘உதயநிதிக்கு பிடிக்காத கதையில் ஹிட் அடித்தேன்’ -சுந்தர் சி!

Sundar C Speech: ‘உதயநிதிக்கு பிடிக்காத கதையில் ஹிட் அடித்தேன்’ -சுந்தர் சி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Dec 28, 2022 06:00 AM IST

Director Sundar C On Udhayanidhi stalin: ‘சினிமாவுக்கு கலங்கரை விளக்கு மாதிரி ரெட்ஜெய்ண்ட் மூவிஸ் உள்ளது. எத்தனையோ தயாரிப்பாளர்கள், நிம்மதியாக படம் பண்ண காரணமாக இருப்பது ரெட்ஜெய்ண்ட் தான்’ -சுந்தர் சி

இயக்குனர் சுந்தர் சி  -கோப்புபடம்
இயக்குனர் சுந்தர் சி -கோப்புபடம்

‘‘நான் படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டு, பண்ண முடியாமல் போன இரு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஒன்று விஜய் சார், மற்றொன்று உதயநிதி சார். எனக்கு உதயநிதி சாருடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு வந்தது. அதற்கான ஐடியாவும் உதயநிதி தான் தந்தார் .

இயக்குனர் ராஜேஷ் சாரின் கருவில், உதயநிதி சாரோடு ஐடியாவில் ஒரு கதை கொடுத்தார். நான் அவருக்கு பிடிக்காத மாதிரி, ஸ்கிரிப்டை கொஞ்சம் டெவலப் பண்ணிட்டேன். அதனால் அவருடன் படம் பண்ண முடியாமல் போனது.

ஆனாலும், அவரிடம் நான் போய் கேட்டேன், இந்த ஸ்கிரிப்ட் எனக்கு பிடித்திருக்கிறது, இதை நான் பண்ணட்டுமா என்று கேட்டேன். அவரும் உடனே ராஜேஷ் சாரிடம் கேட்டு கதையை தந்துவிட்டார். அப்படி அந்த கதையை வைத்து ஹிட் கொடுத்த படம் தான், தீயா வேலை செய்யணும் குமாரு படம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் -கோப்புபடம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் -கோப்புபடம் (PTI)

ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் சுந்தர் சி. இன்றும் தொடர்ந்த கமர்ஷியல் படங்களை தந்து கொண்டிருக்கும் சுந்தர் சி, சமீபத்தில் உதயநிதி பங்கேற்ற படவிழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய சுந்தர் சி, தனது நிறைவேறாத ஆசைகள் பற்றி பேசினார். இதோ அவரது பேச்சு: 

‘‘நான் படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டு, பண்ண முடியாமல் போன இரு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஒன்று விஜய் சார், மற்றொன்று உதயநிதி சார். எனக்கு உதயநிதி சாருடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு வந்தது. அதற்கான ஐடியாவும் உதயநிதி தான் தந்தார் .

இயக்குனர் ராஜேஷ் சாரின் கருவில், உதயநிதி சாரோடு ஐடியாவில் ஒரு கதை கொடுத்தார். நான் அவருக்கு பிடிக்காத மாதிரி, ஸ்கிரிப்டை கொஞ்சம் டெவலப் பண்ணிட்டேன். அதனால் அவருடன் படம் பண்ண முடியாமல் போனது. 

ஆனாலும், அவரிடம் நான் போய் கேட்டேன், இந்த ஸ்கிரிப்ட் எனக்கு பிடித்திருக்கிறது, இதை நான் பண்ணட்டுமா என்று கேட்டேன். அவரும் உடனே ராஜேஷ் சாரிடம் கேட்டு கதையை தந்துவிட்டார். அப்படி அந்த கதையை வைத்து ஹிட் கொடுத்த படம் தான், தீயா வேலை செய்யணும் குமாரு படம். 

அதற்காக உதயநிதி சாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தனக்காக செய்த ஸ்கிரிப்டை வேறு ஒருவருக்கு செய்வதற்கு ஒப்புக்கொள்ள ஒரு மனசு வேண்டும். அந்த மனதிற்கு உதயநிதிக்கு நன்றி. 

அவருக்கு ஒரு மெஜேஜ் அனுப்பினால், அடுத்த 10 நிமிடத்தில் பதில் வரும்; இல்லையென்றால், நாம் கேட்ட விசயம் நடந்திருக்கும். அதனால் தான் அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். 

சினிமாவுக்கு கலங்கரை விளக்கு மாதிரி ரெட்ஜெய்ண்ட் மூவிஸ். எத்தனையோ தயாரிப்பாளர்கள், நிம்மதியாக படம் பண்ண காரணமாக இருப்பத ரெட்ஜெய்ண்ட் தான். அதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,’’

என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர் சி தெரிவித்தார்.