Singapenne Serial: உச்சக்கட்ட குழப்பம்.. ஆனந்தி கழுத்தை நீட்டப்போவது யாருக்கு? - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் இங்கே!
Singapenne Serial: ஆனந்தின் அப்பா மகேஷூக்கு ஆனந்தியை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்க, அவளோ அன்பை விரும்பி கிட்டத்தட்ட அவனது வீட்டின் மருமகளாகவே மாறிவிட்டாள். - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Singapenne Serial: உச்சக்கட்ட குழப்பம்.. ஆனந்தி கழுத்தை நீட்டப்போவது யாருக்கு? - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் இங்கே!
Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியல் தொடர்பாக இன்று வெளியான புரொமோவில் ஆனந்தின் அப்பா மகேஷூக்கு ஆனந்தியை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்க, அவளோ அன்பை விரும்பி கிட்டத்தட்ட அவனது வீட்டின் மருமகளாகவே மாறிவிட்டாள்.
இதற்கிடையே சுயம்புவும் ஆனந்தியை கல்யாணம் செய்து கொள்ள துடித்துக்கொண்டிருக்கிறான். இந்த நிலையில் ஆனந்தி என்ன முடிவெடுக்கப்போகிறாள் என்ற ரீதியிலான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் ஹாஸ்டல் வார்டன் இருவரும் ஆனந்தியின் வீட்டிற்குச் சென்று அவளை பெண் கேட்டனர். ஆனந்தியின் அப்பாவும், அவர்களும் இது சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சுயம்பு உள்ளே நுழைந்து விட்டான்.