சுச்சி ஒரு மனநேயாளி.. நிச்சயம் கம்பி எண்ணுவார்.. ஜோதிகா பண்ணுனது பெரிய தப்பு.. இது பயில்வான் தியரி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சுச்சி ஒரு மனநேயாளி.. நிச்சயம் கம்பி எண்ணுவார்.. ஜோதிகா பண்ணுனது பெரிய தப்பு.. இது பயில்வான் தியரி

சுச்சி ஒரு மனநேயாளி.. நிச்சயம் கம்பி எண்ணுவார்.. ஜோதிகா பண்ணுனது பெரிய தப்பு.. இது பயில்வான் தியரி

Malavica Natarajan HT Tamil
Published Nov 19, 2024 02:18 PM IST

ஜோதிகாவிற்கு எதிராக சுசித்ரா ஒரு மனநோயாளி போல் பேசுகிறார். அவர் இப்படியே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் ஜெயிலுக்கு செல்வார் என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் எச்சரித்துள்ளார்.

சுச்சி ஒரு மனநேயாளி.. நிச்சயம் கம்பி எண்ணுவார்.. ஜோதிகா பண்ணுனது பெரிய தப்பு.. இது பயில்வான் தியரி
சுச்சி ஒரு மனநேயாளி.. நிச்சயம் கம்பி எண்ணுவார்.. ஜோதிகா பண்ணுனது பெரிய தப்பு.. இது பயில்வான் தியரி

ஜோதிகாவின் கருத்து

இதில், முதல் அரை மணி நேரம் படம் நன்றாக இல்லை. படத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும், படத்தின் ஒளிப்பதிவு பாராட்டும் படி இருந்தது. 2ம் பாதியில் பெண்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் நன்றாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இங்கு வெளியாகும் இரட்டை அர்த்த வசனப் படங்களுக்கு எல்லாம் வராத பேச்சுகள் இந்தப் படத்திற்கு ஏன் வருகிறது என சில கேள்விகளையும் முன்வைத்தார்.

மோசமாக பேசிய சுசித்ரா

இந்நிலையில், பாடகி சுசித்ரா கங்குவா படம் குறித்த ஜோதிகாவின் கருத்துக்கு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ஜோதிகாவை பேரழகன் பிச்சைக்காரி எனக் கூறியதுடன் சில அசிங்கமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார். படம் இத்தனை நாள் சரிவை சந்தித்தது போதாது என இவர் பங்கிற்கு இன்னும் பேசி இருக்கிறார் எனக் கூறியதுடன், ஜோதிகா வேறு சூர்யா வேறு. இருவரையும் இணைத்துப் பேசாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.

கண்டனம் தெரிவித்த பயில்வான்

சுசித்ராவின் இந்தக் கருத்து மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சுசித்ராவின் பேச்சுக்கு பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்டான் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சுசித்ராவிற்கும் சூர்யாவிற்கும் என்ன சம்பந்தம். அவர் படம் ஓடினால் என்ன ஓடவில்லை என்றால் என்ன?. சூர்யாவின் குடும்பத்தினர் யார் வம்புக்கும் போகமால் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கின்றனர்.

அவர்கள் குடும்பத்தைப் பற்றி இப்படி எல்லாம் பேசலாமா? ஜோதிகா அவரது மனைவி. அவர் தன் கணவரின் படத்திற்காக பேசுகிறார். அப்படி இருக்கையில், அதைப் பற்றி கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு என்ன தகுதி இருக்கிறது.

சுசித்ரா மனநோயாளி

சுசித்ரா மனநோயாளி என அவரது கணவர் கூறியதால் தான் அவர் மீதான வழக்குகளில் இருந்தே விடுவிக்கப்பட்டார். அவர் தற்போது பேசுவதை எல்லாம் பார்க்கும் போது மனநோயாளி போலத் தான் தெரிகிறது.

ஒரு மாதத்திற்கு முன் எந்த நடிகர் குறித்தும் இனி பேசப் போவதில்லை. பேட்டி கொடுக்கப் போவதில்லை. நான் மும்பையில் செட்டில் ஆகப் போகிறேன். எனக்கு நல்ல வேளைக் கிடைத்துள்ளது என்றார். ஆனால், அப்படியே தற்போது மாறிப் பேசுகிறார்.

ஜெயிலுக்கு போய் விட நேரிடும்

ஜோதிகா எத்தனை படத்தில் நடித்துள்ளார். எவ்வளவு சொத்துக்கு அதிபதி. அவரைப் போய் பிச்சைக்காரி என சொல்லலாமா?. ஜோதிகா மும்பையில் பெரிய குடியிருப்பு வாங்கியுள்ளார். அவரது பெற்றோரும் வசதியானவர்கள் தான். சுசித்ரா இதுபோன்று பேசியதற்காக ஜோதிகா வழக்கு தொடுத்தால் நிச்சயம் அவர் ஜெயிலுக்கு போவது உறுதி. சுசித்ரா அடுத்த கஸ்தூரியாக மாறிவிடுவார் எனவும் கூறியுள்ளார்.

ஜோதிகா செய்தது தவறு

மேலும், ஜோதிகா சூர்யாவை அவரது குடும்பத்தில் இருந்து பிரித்தது மிகவும் தவறானது. சிவக்குமார் தனது இரு மகன்களுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வளவு பெரிய வீட்டை கட்டி வைத்துள்ளார். ஆனால். அங்கு தங்க மாட்டேன் எனக் கூறிவிட்டு மும்பை சென்று விட்டீர்கள். சூர்யாவின் கங்குவா பட விழாக்களில் எதிலும் கலந்து கொள்ள வில்லை,

சென்னையில் நடைபெற்ற விழாக்கள் என்றால் கூட பரவாயில்லை இங்கு வந்தால் சிவக்குமாரை பார்க்க நேரிடும் அதனால் தவிர்த்து விட்டாரர் எனக் கூறலாம். ஆனால். ஜோதிகா மும்பையில் நடந்த விழாக்களுக்கும் செல்லவில்லை. அப்படி இருந்தால், இதுகுறித்து அனைவரும் கேள்வி எழுப்பத்தான் செய்வார்கள் எனக் கூறினார்.

படத்தில் நல்ல விஷயங்களும் இருக்கு

முன்னதாக, பலரும் கங்குவா படத்தை விமர்சித்தார்கள் தான். ஆனால் நான் படத்தின் ஒளிப்பதிவு,காட்சி அமைப்பு, கார்த்தியின் உழைப்பு, சூர்யாவின் நடிப்பு ஆகியவை பற்றி நல்லவிதமாகவும் குறிப்பிட்டுள்ளேன். படம் இருட்டிலே செல்வதால் பலருக்கும் புரியவில்லை. அதுமட்டுமல்லாமல் படம் வெளியாகும் சமயத்தில் தான் 3டி என அறிவித்தார்கள். முன்னதாகவே அறிவித்திருந்தால் இப்படி நடந்திருக்காது எனவும் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.