SS Rajamouli: ஜப்பானில் நிலநடுக்கம்.. 28 வது மாடியில் சிக்கிய ராஜமெளலி..அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மகன்!
ஜப்பானில் தற்போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தரை மெதுவாக நகர ஆரம்பித்து நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணரவே எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது.

SS Karthikeya and Rajamouli are in Japan for a special screening of RRR
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, அவரது மகன் கார்த்திகேயா மற்றும் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா ஆகியோர் 2022 -ம் ஆண்டு வெளியான RRR படத்தின் சிறப்புத் திரையிடலுக்காக ஜப்பானில் சென்று இருக்கின்றனர்.
அவர்களின் பயணம் ரசிகர்களைச் சந்திப்பது, அடுத்ததாக மகேஷ்பாபுவுடன் இணைந்து செய்யும் திரைப்படம் குறித்தான அப்டேட்டுகளை வழங்குவது என திட்டமிடப்பட்டு இருந்தாலும், அதையும் தாண்டிய ஒரு பயங்கரமான அனுபவத்தை அவர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் கார்த்திகேயா, “ஜப்பானில் தற்போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தரை மெதுவாக நகர ஆரம்பித்து நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணரவே எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது.