Squid Game O Yeong Su: பாய்ந்த பாலியல் வழக்கு; ‘ஸ்குவிட் கேம்’ தாத்தாவிற்கு 1 வருடம் சிறை! -நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Squid Game O Yeong Su: இவர் மீது 2017ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. அந்தப்புகாரில் ஓ யோங் சு வீட்டின் அருகில் உள்ள பெண்மணியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்ததாகவும், முத்தமிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Squid Game O Yeong Su: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற கொரியன் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. இந்த தொடரில் ப்ளேயர் 001 கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர் ஓ யோங் சு. இந்த கதாபாத்திரத்தில் நடித்ததிற்காக இவருக்கு கோல்டன் குளோப் விருதும் வழங்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கு
இவர் மீது 2017ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. அந்தப்புகாரில் ஓ யோங் சு வீட்டின் அருகில் உள்ள பெண்மணியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்ததாகவும், முத்தமிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் ஓ யோங் சு விற்கு முதலில் 8 மாதம் சிறை தண்டனையும், 2 வருடங்கள் நன்னடத்தை சோதனை காலமும் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது தண்டனை காலம் அதிகரிக்கப்பட்டு ஒரு வருடமாக மாற்றப்பட்டு இருக்கிறது.
80 வயதான ஓ யோங் சு இந்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்து போராடி வந்தார். அந்த சமயத்தில் தான் ஒரு அப்பாவி என்பதை முன்னிறுத்தியதாக தெரிகிறது. மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பு ஜூன் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 3 நடந்தது என்ன?
முன்னதாக, ஏப்ரல் 3 நடந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது வழக்கறிஞர்கள், கிட்டத்தட்ட 5 தசப்தங்களாக நாடகத்துறையில் பணியாற்றி வரும் ஓ யோங் சு, நாடக குழுவில் இருந்த வயது குறைந்த உறுப்பினரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் என்று சித்தரித்தனர்.
மேலும் சம்பவம் நடந்ததிலிருந்து, பாதிக்கப்பட்டவர் வேலை செய்யும் இடத்திலும், அன்றாட வாழ்க்கையிலும் மிகவும் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக கூறினர். அத்துடன் ஓ யோங் சு ‘நான் அதை ஒரு தந்தையின் இதயத்துடன் செய்தேன்’ என்று கூறியதை மேற்கோள் காட்டி, இது மன்னிப்புக்கேட்பதை விட மோசமான விளைவை உண்டாக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க ஓ யோங் சுவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனையை கோரினர்.
ஓ யோங் சூ குழு சொன்னது என்ன?
இருப்பினும், ஓ யியோங் சுவின் சட்டக் குழு அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தில் ‘குறிப்பிட்ட தன்மை, நிலைத்தன்மை மற்றும் தர்க்கரீதியான ஒத்திசைவு இல்லை" என்று கூறி, வழக்கு முற்றிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணக்கில் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது என்று வாதிட்டது.
அத்துடன் குற்றச்சாட்டுகள் எழுந்த நேரத்தையும் சுட்டிக்காட்டியது. ஓ யோங் சு ஸ்க்விட் கேமைப் பாதிக்கக்கூடிய சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக மட்டுமே முறையாக பதிலளித்தார் என்று வாதிட்டது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்