30 Years Of Seevalaperi Pandi: ‘திருநெல்வேலிச் சீமையில..’: துரோகங்களால் குற்றவாளியாகும் சீவலப்பேரி பாண்டியின் கதை!
30 Years Of Seevalaperi Pandi: துரோகங்களால் குற்றவாளியாகும் சீவலப்பேரி பாண்டியின் கதை, சினிமாவில் படமாகி 30 ஆண்டுகளைத் தொட்டுள்ளது.

30 Years Of Seevalaperi Pandi : புலனாய்வு இதழான ஜூனியர் விகடனில் மறைந்த எழுத்தாளர் செளபா, உண்மை நாயகன் ஒருவரைப் பற்றி எழுதிய தொடர் தான், ‘சீவலப்பேரி பாண்டி’. இதை திரைப்படமாக்க முடிவு செய்த இயக்குநர் பிரதாப் போத்தன், எழுத்தாளர் செளபாவை அழைத்து, இப்படத்தின் கதையை எழுதித்தரச் சொல்லி பெற்றுக்கொண்டு, பின், கே. ராஜேஸ்வரை அழைத்து, சீவலப்பேரி பாண்டி தொடர்பான தகவல்களை, அவரது ஊர் வாசிகளிடம் கேட்டு, திரைக்கதை அமைத்து தரச்சொல்லி எடுத்த படம் தான், சீவலப்பேரி பாண்டி. இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் 1994ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தின் கதை என்ன?
சீவலப்பேரி பாண்டி, தைரியமான வம்பு வழக்குகளுக்கு அஞ்சாத ஆள். இவர் வேலம்மாள் என்னும் பெண்ணை மணமுடித்துவிட்டு, தனது தாய் மற்றும் அண்ணன் மலையாண்டியுடன் வாழ்ந்து வந்தார்.
அப்போது ஊர்ப்பெரியவராக இருப்பவர், கிராம்ஸ். சீவலப்பேரி பாண்டியின் வீரம் அறிந்து அவரை மெய்ப்பாதுகாவலராக வைத்துக் கொள்கிறார்.