Pennin Manathai Thottu: ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்’பாடல்.. லாடு லபக் தாஸ் காமெடி.. 24ம் ஆண்டில் பெண்ணின் மனதைத்தொட்டு
Pennin Manathai Thottu: ’கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்’பாடல்; லாடு லபக் தாஸ் காமெடி என ஹிட்டடித்த பெண்ணின் மனதைத்தொட்டு திரைப்படம் வெளியாகி 24ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

Pennin Manathai Thottu: இயக்குநர் எழில் இயக்கத்தில் பிரபுதேவா, சரத் குமார், ஜெயசீல் ஆகியோர் நடித்து ஜூலை 7ஆம் தேதி வெளியான காதல் திரைப்படம் தான், பெண்ணின் மனதைத்தொட்டு. இப்படம் குறித்து நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
பெண்ணின் மனதைத்தொட்டு திரைப்படத்தின் கதை என்ன?:
இந்தியாவில் முன்னணி இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர், சுனில். இவர் தனது குடும்ப நண்பர் கணபதியின் இல்லத்தில் திருச்சியில் வசிக்கிறார்.
அப்போது சுனிதா என்னும் இளம்பெண், ஒரு இதயப் பிரச்னை கொண்ட பெண்ணுடன் மருத்துவமனைக்குச் செல்கிறார். அப்போது அந்த குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கவரும் சுனிலைப் பார்த்ததும் டென்ஷனாகிறார்.
யார் இந்த சுனில், சுனிலுக்கும் சுனிதாவுக்கும் இடையில் இருக்கும் உறவு என்ன என்பதை ஒரு ஃபிளாஷ்பேக் வழியாகச் சொன்னால் அது ‘பெண்ணின் மனதைத் தொட்டு’.
சுனிலும் சுனிதாவும் சந்தித்துக்கொண்டபின்னர், ஃபிளாஷ்பேக் விரிகிறது. சுனிலின் அண்ணன் பலராம் ஒரு ரவுடி. தன் தம்பியை தன் தொழிலில் இருந்துவிலக்கி நன்கு படிக்கவைக்கிறார். சுனிலும் நன்கு படித்து ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அப்போது கல்லூரி வகுப்புத்தோழி சுனிதாவை காதலிக்கிறார். பின் இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர்.
இந்தக் காதலை தன் சகோதரன் பலராமிடம் தெரிவிக்கின்றார், சுனில். அதற்கு அவரும் சம்மதிக்கிறார்.
அப்போது, சுனிதா தனது சகோதரியின் குழந்தையின் காது குத்துவிழாவுக்குச் செல்கிறார்.
சுனிதாவின் சகோதரியின் கணவர், நல்ல வசதியான குடும்பத்தில் அவரை திருமணம் செய்துவைத்து, அதன்மூலம் பணப்பலன்களை அனுபவிக்கலாம் என்று நினைக்கிறார். அப்போது சுனிலை தன் வீட்டிற்கு வந்து, தன் கல்யாணத்தினை தடுத்து நிறுத்தி, அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார், சுனிதா.
ஆனால், சரியான நேரத்திற்கு சுனிலால் வந்து கல்யாணத்தை நிறுத்தமுடியாமல் போகிறது. அப்போது, சுனிதாவின் சகோதரி தன்னை மாய்த்துக்கொண்டு தன் தங்கையின் திருமணத்தை நிறுத்துகிறார். அப்போது சுனிதா சுனிலை வெறுக்கத் தொடங்குகிறார். திருமணம் நின்றபின் வந்தாலும் சுனிலின் வாதத்தை சுனிதா ஏற்றுக்கொள்ளவில்லை. தன் சகோதரியின் இறுதிச்சடங்குக்குப் பின், சுனிதா தன் சகோதரியின் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்புகிறாள்.
தற்போது கதை நிகழ்காலத்துக்கு வருகிறது. அப்போதும் சுனில் சுனிதாவை உண்மையான காரணத்தைச் சொல்லி, சமாதானப்படுத்தப் பார்க்கிறார். ஆனால், சுனிதா அதை மீண்டும் கேட்கத் தயாராக இல்லை. இதனால், சுனிதா சகோதரியின் குழந்தைக்கு வைத்தியம் பார்த்துவிட்டு கனடாவுக்கு வேலைக்குச் செல்ல தயாராகிறார், சுனில்.
திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட அன்று, தனது சகோதரியின் கணவர், சுனிலின் அண்ணன் பலராமனைக் கொன்றதை தாமதமாக அறிந்துகொள்கிறார், சுனிதா. இதனால் தான் திருமணத்தை நிறுத்த சுனிலால் வரமுடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டார். இதற்கிடையே எல்லோரையும் பிரிந்து சுனில், வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார். அப்போது அவரை சாலை மார்க்கமாக துரத்திச்சென்று, சுனிதா சுனிலிடம் பேசுகிறார். பின் இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.
’பெண்ணின் மனதைத் தொட்டு’ திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் பலராமாக சரத் குமாரும், சுனிலாக பிரபு தேவாவும், சுனிதாவாக ஜெய சீலும் நடித்துள்ளனர். இப்படத்தில் சுனிதாவின் சகோதரியாக ஐஸ்வர்யாவும், பிரபுதேவாவின் நண்பர்களாக விவேக்கும், தாமுவும் நடித்துள்ளனர்.
பிரபலமான காமெடி:
இப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் கந்தசாமியாக நடித்திருக்கும் விவேக், அர்த்தராத்திரியில் தனது ஃபுரோபஸர் தாஸுக்கு போன் செய்து, “நீங்கள் வெறும் தாஸா.. லாடு லபக்கு தாஸா?’’என விசாரிப்பார். இந்த காமெடி இன்று வரை படுபிரபலம்.
இப்படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் படுஹிட்டாகின. குறிப்பாக, கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா எனும் பாடலும், நான் சால்ட் கோட்டை, தியாகராஜனின் தெய்வ கீர்த்தனை ஆகியப் பாடல்களும் ஹிட்டாகின.
இப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவுசெய்தாலும், படத்தை இன்று நாம் டிவியில் பார்த்தாலும் ஃபீல் குட் ஃபீலைத் தருகிறது.

டாபிக்ஸ்