M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு
M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு குறித்துக் காண்போம்.

M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு
M.S.Subbulakshmi: எம்.எஸ்.சுப்புலட்சுமி தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஒரு இந்திய கர்நாடக இசைக் கலைஞர் ஆவார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் மற்றும் ரமோன் மகசேசே விருதைப்பெற்ற முதல் இந்திய இசைக்கலைஞர் ஆவார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு, செப்டம்பர் 16 அன்று சென்னை மாகாணத்தின் மதுரையில் வீணை இசைக்கலைஞர் சண்முகவடிவு அம்மாள் மற்றும் சுப்பிரமணிய ஐயர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது பாட்டி அக்கம்மாள் வயலின் கலைஞர் ஆவார்.
சிறு வயதிலேயே கர்நாடக இசையைக் கற்கத் தொடங்கிய இவர், செம்மங்குடி சீனிவாச ஐயரின் பயிற்சியின்கீழ் கர்நாடக இசையிலும், பின்னர் பண்டிட் நாராயணராவ் வியாஸின்கீழ் இந்துஸ்தானி இசையிலும் பயிற்சி பெற்றார்.