Aishwarya Rajesh: டான்ஸ் தந்த திருப்பம்.. பக்கத்து வீட்டு பெண் லுக்.. ரசிகர்கள் மனதில் குடிபுகுந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Aishwarya Rajesh Birthday: சினிமா பின்புலத்தை சேர்ந்த குடும்பமாக இருந்தாலும் டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் திறமையை வெளிப்படுத்தி நடிகையாக ஆனவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தென்னிந்திய சினிமாக்களில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார்.
தமிழ் டிவி காமெடி ஷோவான சன்டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சினிமாவில் ஹீரோயினாகி தற்போது தென்னிந்திய சினிமாக்களில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் சினிமாக்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமா பின்னணி குடும்பத்தை சேர்ந்தவராக உள்ளார்.
டான்ஸ் ஏற்படுத்திய திருப்பம்
ஐஸ்வர்யா ராஜேஷ் தாத்தாவான அமர்நாத் தெலுங்கு சினிமாவில் 1950-60 காலகட்டத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் பின்தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையான ராஜேஷ் தெலுங்கில் நீலிவங்கா என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சில படங்களில் வில்லத்தனமான வேடங்களில் நடித்த இவர் மதுபழக்கத்தால் 38 வயதில் உயிரிழந்தார்.
அப்போது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எட்டு வயதுதான். அப்போது அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. பள்ளி, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், டான்ஸ் மீதான ஆர்வத்தால் முறையாக பயின்றார். இதன் மூலம் பல்வேறு டான்ஸ் ஷோக்களில் பங்கேற்ற இவருக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறந்த பெர்பார்மென்ஸ்களால் அனைவரையும் கவர்ந்து மூன்றாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார்.
சினிமா பயணம்
இதைத்தொடர்ந்து சன்டிவியின் காமெடி ஷோவான அசத்தப்போவது யாரு ஆங்கர் ஆனார். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் சினிமா வாய்ப்பும் கிடைத்தது. ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்த இவர், பின்னர் பா. ரஞ்சித் அறிமுக படமான அட்டகத்தி மூலம் கவனம் பெற்றார்.
பக்கத்து வீட்டு பெண் லுக்கில் இருந்த இவர் விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படம் மூலம் பேமஸ் ஆனார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்த புதிதிலேயே காக்க முட்டை படத்தில் இரு சிறுவர்களுக்கு தாயாக தோன்ற சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் ஹோம்லி ஹீரோயினாக தன்னை நிலை நாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் வருடத்துக்கு அரைடஜன் படங்கள் என கமிட்டாக வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்தார். தொடர்ந்த மலையாளம், தெலுங்கு படங்களிலும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து முத்திரை பதித்தார்.
தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை நிருபிக்கும் விதமாக சில படங்களில் முகம் சுளிக்காத அளவில் கவர்ச்சி தரிசனமும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். சினிமா தவிர மியூசிக் விடியோ, சுழல் என ஓடிடி தொடரிலும் நடித்துள்ளார்.
கலைமாமணி விருது
தனது அபார நடிப்பு திறைமையாக பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகை விருது, பிலிம்பேர் விருதுகள் செளத், நார்வே தமிழ் பிலிம் பெஸ்டிவல் விருது, எடிசன் விருது போன்ற விருதுளை வென்றுள்ளார். தமிழ் சினிமாவில் இவர் வெளிப்படுத்திய கலை சேவையை கெளரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என வரிசை கட்டி 5 படங்களுக்கு மேல் வர இருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமா பின்புலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தனது அற்புத நடிப்பு திறமையால் தென்னிந்திய சினிமாக்களில் இளம் ஹீரோயினாகவும், ரசிகர்கள் மனதில் குடிபுகுந்த நடிகையாகவும் திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தொடர்புடையை செய்திகள்