Soori: கடைசி நேரத்தில் எழுந்த பிரச்னை.. டாப் நடிகர்கள் செய்யாத விஷயத்தை செய்த சூரி
Soori: கருடன் படத்திற்காக சூரி தானாக முன் வந்து செய்த விஷயம் அனைவரின் கவனத்தையும் பெற்று இருக்கிறது.

Soori: நடிகர்கள் சசிக்குமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயக்குமார் என பெரிய நடிகர் பட்டாளே கதாபாத்திரங்களாக களம் இறங்கி இருக்கும் திரைப்படம் கருடன். விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமான நகைச்சுவை நடிகர் சூரி, கருடன் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கருடன் குழு
நெடுஞ்சாலை படப்புகழ் ஷிவிதா நாயர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷிணி ஹரிப்பிரியன், பிரகிடா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்து உள்ளார்கள்.
படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.