'நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா.. என்ன பத்தி தெரிஞ்சிட்டு கேள்வி கேழு'- கொந்தளித்த வாட்டர்மெலன் திவாகர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா.. என்ன பத்தி தெரிஞ்சிட்டு கேள்வி கேழு'- கொந்தளித்த வாட்டர்மெலன் திவாகர்

'நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா.. என்ன பத்தி தெரிஞ்சிட்டு கேள்வி கேழு'- கொந்தளித்த வாட்டர்மெலன் திவாகர்

Malavica Natarajan HT Tamil
Published May 07, 2025 10:46 AM IST

என்கிட்ட கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி என்னப் பத்தி தெரிஞ்சிட்டு கேழு. நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா என வாட்டர் மெலான் ஸ்டார் திவாகர் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது பரவலாக சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

'நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா.. என்ன பத்தி தெரிஞ்சிட்டு கேள்வி கேழு'- கொந்தளித்த வாட்டர்மெலன் திவாகர்
'நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா.. என்ன பத்தி தெரிஞ்சிட்டு கேள்வி கேழு'- கொந்தளித்த வாட்டர்மெலன் திவாகர்

ஆரம்பத்திலேயே எமோஷன்

படம் பார்த்து முடித்துவிட்டு வந்த திவாகர் பேசுகையில், " என்னை உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். நான் தான் நடிப்பு அரக்கன், வாட்டர்மெலான் ஸ்டார் டாக்டர் திவாகரன் என அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் தொடர்ந்து பேச ஆரம்பிக்கும் போதே மிகவும் எமோஷனலாக தொடங்கினார். அப்போது, " ரீசன்ட்டா ஏதோ படத்தோட ஆடியோ லான்ச்ல நம்ம மிஷ்கின் சார பேசிருக்காரு.

இன்ஸ்டாகிராமில நடிக்குறவங்கள மூஞ்சில குத்துவேன். மொகறையில குத்துவேன்னு சொல்லிருக்காரு. இந்த மாதிரியான வார்த்தைகளை எல்லாம் தவிர்த்துட்டு பேசனும். எனக்கு இப்போ ஒன்னு நியாபகம் வருது. மிஷ்கின் சார் பேசுனது பிரச்சனையானப்போ, அதை எல்லாம் எதிர்த்து நான் குரல் குடுத்திருக்கேன். சார் பேசினது தப்பு' என பேசிக் கொண்டிருந்த சமயத்திலேயே பத்திரிகையாளர்கள் படத்தை பற்றி மட்டும் பேசுமாறு குறுக்கிடத் தொடங்கினர்.

குறுக்கிட்ட பயில்வான்

பின்னர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நீங்க பேசுறத கேக்குறதுக்கு நாங்க வரல, படத்தை பத்தி மட்டும் பேசுங்க என்றார். அதோடு படத்தில் கலாச்சாரம் பற்றி எல்லாம் பேசியிருப்பதாக சொன்னார்கள். அதை பற்றி பேசுங்கள் என்றார். உடனே கோபமான திவாகர், நான் படத்தை பத்தி தான் பேசுறேன். நானும் ஒரு படத்தை பாத்திருக்கிறேன். அதைப் பத்தி பேச எனக்கு உரிமை இருக்கு என்றார்.

இது சபை நாகரீகமா?

நான் படத்த பாத்திருக்கேன். அதப்பத்தி பொதுவெளியில கருத்து சொல்ல எனக்க உரிமை கிடையாதா? நான் பேசும் போது குறுக்க வந்து பேசுகிறீர்களே இதெல்லாம் சபை நாகரீகமா என்றும் கேட்டார். இந்த வார்த்தையை கேட்டதும் பத்திரிகையாளர்கள் பலரும் திவாகருக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். நான் பிரஸ் மீட்ல பேட்டி கொடுத்திட்டு இருக்கேன். இப்படி குறுக்க வர்றது சபை நாகரீகமா என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். நான் உங்களவிட சின்னைப் பையன், குழந்தை. பிரஸ்மீட்ல இத்தனை பேர் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. இப்படி வந்து டிஸ்ட்ரப் பண்றீங்க என்றார். இப்படியே மாறி மாறி இருவரும் வாக்குவாதம் செய்ய பத்திரிகையாளர்கள் பயில்வானுக்கு ஆதரவாக பேசினர்.

புது முகங்களுக்கு வாய்ப்பு

பின், பத்திரிகையாளர்கள் கதையை பற்றி மட்டும் பேசுங்க என சொன்னதும், திவாகர் படத்தை பற்றி பேசத் தொடங்கினார். இந்தப் படத்தில் நிறைய புது முகங்கள் உள்ளனர். அதற்காக நான் நன்றி சொல்றேன். நான் மிஷ்கின் சார பத்தி குறை சொல்லல. இந்த மாதிரி புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்க. யாரையும் தப்பா பேசாதீங்கன்னு தான் சொன்னேன் என்றார். நான் தவறா பேசல என்றார். அப்போது குறுக்கிட்ட பயில்வான், எங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. எங்களுக்கு வேலை இருக்கு என்றார்.

சிக்னேச்சர் ஸ்டெப்

பின், இந்தப் படத்தில் கலாச்சாரத்தை பற்றி பேசி இருக்காங்க. நிறைய படத்தோட ஆடியோ லான்ச்க்கு நடிகர்களும் நடிகைங்களும் வர்றதே இல்ல. ஒரு புரொடியூசர்ன்னா விக்காதத லிச்சு தான் படம் பண்றாங்க. அவங்க அந்தப் படத்துல ஒருத்தர நாயகனா வச்சு சித்தரிக்குறாங்கன்னா அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சன இருக்கும். அதையெல்லாம் கடந்து வரணும் என்றார்.

பின், என்னோட சிக்னேச்சர் ஸ்டெப்ப போட்டுக்கிறேன் என திவாகர் சொல்ல, பயில்வான் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

நீ என்ன பெரிய ஆளா?

பின் பேசிய திவாகர், நான் இன்ஸ்டாகிராம் தாண்டி 5 படத்துல நடிச்சுட்டேன். என்னோட முதல் படம் ரிலீஸ் ஆகப் போகுது. முதல்ல என்ன பத்தி தெரிஞ்சுட்டு பேசுங்க. என்ன கேள்வி கேக்குறீங்களே நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா? சின்னப்புள்ள தனமா கேள்வி கேக்குறத நிப்பாட்டு என காட்டமாக பேசினார். பின் அந்க இடமே கலவரமானது போல் மாறியது. இதுதொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.