ரஜினி கொடுக்க மறுத்த வாய்ப்பு.. வாண்ட்டடாக இறங்கி செய்த விஜய்.. “ அவர் கொடுத்த அன்புதான்” - சிவகார்த்திகேயன் பேச்சு!
‘கோட்’ படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த போது, அந்த காட்சியில் அவர் கொடுத்த துப்பாக்கி ஸ்பெஷலா இல்லை, படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்ததற்காக அவர் கொடுத்த வாட்ச் ஸ்பெஷலா என்பதற்கு சிவகார்த்திகேயன் பதில் கொடுத்திருக்கிறார்.

நடிகர் விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றில், நடிகர் விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்த போது, சிவகார்த்திகேயன் விஜயிடம் ‘இதைவிட பெரிய வேலைக்கு போறிங்கனு நினைக்கிறேன். இனி இதை நான் பாத்துக்குறேன்’ எனப்பேசி இருப்பார். இது விஜய் அரசியலுக்கு செல்வதின் காரணமாக, சினிமாவை விட்டு விலகுவதால், தானே அடுத்த தளபதியாக சினிமா துறையில் இருக்கப்போகிறேன் என்று சிவகார்த்திகேயன் சூசகமாக சொல்வதாக பலர் சமூகவலைதளங்களில் எழுதினர்.
இதற்கிடையே கோட் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சிவகார்த்திகேயனுக்கு வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னையில் நடந்த அமரன் ஆடியோ வெளியீட்டு விழாவில், அவரிடம் கோட் படத்தின் போது விஜய் கொடுத்த துப்பாக்கி அல்லது வாட்ச் இதில் உங்களின் ஸ்பெஷல் எது என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயன் ‘தளபதி கொடுத்த அன்பு ஸ்பெஷல்’ என்று பதிலளித்தார்.