நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழா.. ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன்! - முழு விபரம்!
குறிப்பாக தற்போது ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மக்கள் மத்தியில் பெருங்கவனம் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியானது வரும் ஞாயிறு மாலை 4:30 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

சிறப்பு விருந்திரனாக பங்கேற்கும் சிவகார்த்திகேயன்.. சரிகமப கிராண்ட் பைனலில் காத்திருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ZEE தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.
குறிப்பாக தற்போது ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மக்கள் மத்தியில் பெருங்கவனம் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியானது வரும் ஞாயிறு மாலை 4:30 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
எங்கே நடக்கிறது தெரியுமா?
ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ் மற்றும் மஹதி என மொத்தம் 6 போட்டியாளர்கள் இறுதி சுற்றில் மோதிக்கொள்ள உள்ளனர். சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்