‘43 வயசுல மாரடைப்பு;4500 ரூ வாங்குனவன நம்பி பொண்ணு கொடுத்தார்; எங்களுக்காக வேலைய விட்டு அவர் பட்ட’-சிவகார்த்திகேயன்
என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார்; அப்போது எனக்கு ஒரு எபிசோட் ஆங்கிரிங் செய்தால், 4000 முதல் 4500 வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும். -சிவகார்த்திகேயன் உருக்கம்!

நடிகர் சிவகார்த்திகேயன், 'எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த வருடம் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கிய காரணம் சிநேகா பிரிட்டோ மற்றும் விஷ்ணு வர்தன் சார் தான். பிரிட்டோ சார் மிக நல்ல மனிதர். என்னோட மருமகனும், மருமகளும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்; நீங்கள்கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று கேட்டார்.
மாமனார் மிகவும் ஸ்பெஷல்
நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான ஒரு உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. ஆகாஷுக்கு நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு சப்போர்ட் செய்யும் மாமனார் கிடைத்திருக்கிறார். ஆகையால், அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பா முரளிக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்.
