Sivakarthikeyan: மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பா! அன்பையும் ஆசியையும் தருமாறு சிவகார்த்திகேயன் கோரிக்கை
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இது உண்மையாகும் விதமாக மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். மூன்றாவது குழந்தைக்கும் ரசிகர்கள் அன்பையும் ஆசியையும் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது குழந்தை பெற்றெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் குழந்தை பிறக்க இருப்பது குறித்த தகவல் தீயாய் பரவின.