5 கோடி பஞ்சாயத்து.. ‘நயன் தாராவின் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் காட்சிகளுக்கு..’ - சிவாஜி புரடொக்ஷன் அறிக்கை
‘நயன் தாராவின் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எங்கள் நிறுவனம் தொடர்பான காட்சிகளுக்கு’ - சிவாஜி புரடொக்ஷன் அறிக்கை
நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன; மேலும் இது தொடர்பாக அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவிடம் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், சிவாஜி புரடொக்ஷன் சார்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியாகி இருக்கிறது.
அந்த அறிக்கையில், நயன் தாராவின் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எங்கள் நிறுவனம் தொடர்பான காட்சிகளுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.
ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் வைத்த கோரிக்கையின் பேரில் மேற்கூறிய நெட்ஃபிக்ஸ் தொடரில், மேற்கூறிய வீடியோ காட்சிகளின் பயன்பாடு குறித்து, சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை சரிபார்க்கும் நோக்கத்திற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தனுஷ் வக்கீல் நோட்டீஸ்
முன்னதாக, நடிகை நயன்தாரா தனது திருமண ஆவணப் படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நயன்தாராவுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரின் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக வில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அவரின் ஆவணப்படம் வெளியானது. அதில் தனுஷை எதிர்த்து, அவரது அனுமதியின்றி நானும் ரெளடிதான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இதற்கிடையே தன் வழிக்கு வராத தனுஷை சாடி நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.
நயன்தாரா அறிக்கை
நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து,நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வருகிற ஜனவரி 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த பிரச்சினை குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி முழுமையாக பேசி இருந்தார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது," நானும் ரவுடிதான் திரைப்படத்தை தனுஷ் தான் தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க,.விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படப்பிடிப்பின் பொழுது நயன்தாராவுக்கும் விக்னேஷ் அவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஒரு கட்டத்தில் அந்த காதல் பற்றி கொண்டு எறிய,.விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் கவனம் செலுத்தாமல் காதலில் கவனம் செலுத்தினார். இதனால் படத்தின் பட்ஜெட் எகிறி விட்டது..இதில் கடுப்பான தனுஷ் இனி நான் படத்திற்கு ஒரு பைசா கூட தர மாட்டேன்; படத்தை முடிந்தால் முடியுங்கள்; இல்லை என்றால், படத்தை நான் நிறுத்தி விடுகிறேன் என்று கறாராக கூறிவிட்டார்.
பிரச்சினையில் தலையிட்ட நயன்!
இந்த நிலையில் நயன்தாரா பிரச்சினையில் தலையிட்டு, அவர் தன்னுடைய பணத்தை போட்டு அந்த படத்தைப் போட்டு முடிக்க உதவி செய்தார். இந்த பிரச்சினையின் வழியாக, நயன்தாராவிற்கும், தனுஷிற்கும் இடையே மிகப்பெரிய விரோதம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஆனால் இரு தரப்புமே அதை வெளியே அப்பட்டமாக காண்பிக்காமல், சுமூகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்பு, netflix நிறுவனத்துடன் தன்னுடைய ஆவணப்படத்தை எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், அந்த ஆவணப்படம் உருவாகி நீண்ட நாட்களாக வெளியே வராமலேயே இருந்தது அதற்கு காரணம் தனுஷ்தான். அந்த ஆவணப் படத்தில் தனுஷின் நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான பல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் அது கிடப்பிலேயே போடப்பட்டது இப்போது நயன்தாரா தரப்பு, சட்டவிரோதமாக நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறது.
மேலும் இது தொடர்பான எந்த விவாதமாக இருந்தாலும், நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பதிவிட்டும் சவாலும் விட்டு இருக்கிறது.
யார் குற்றவாளி?
இன்று நயன்தாரா வெளியிட்ட அறிக்கையை பார்க்கும் பொழுது நயன்தாரா என்னவோ அப்பாவி போலவும், தனுஷ் மிகப்பெரிய குற்றவாளி போலவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் நடந்தது வேறு; ஆம், திரை மறைவில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன.
நயன்தாரா தரப்பு, நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து பாடல்களையோ காட்சிகளையோ பயன்படுத்த வேண்டுமென்றால் நேரடியாக தனுஷை தொடர்பு கொண்டு, முறையாக அனுமதி கேட்டு இருக்கலாம். ஆனால்,அது நடக்கவில்லை;
இதில், விக்னேஷ் சிவன் ஒரு பயங்கரமான வேலை பார்த்து இருக்கிறார்; தனுஷின் மேனேஜரான ஸ்ரேயாஸ் விக்னேஷ் சிவனுக்கும் நண்பர். அவர் ஒருநாள் அவருக்கு போன் செய்து மிகவும் சகஜமாக பேசுவது போல, நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகளை நான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு மெயில் போடு என்று சொல்லிவிட்டு சாப்பிட்டியா... நன்றாக இருக்கிறாயா..? என்று கேட்டு உடனடியாக போனை கட் செய்துவிட்டாராம்;
ஆனால் ஸ்ரேயாஸ் மெயிலை அனுப்பவே இல்லை. இந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்து ஏன் மெயில் அனுப்பவில்லை என்று விக்னேஷ் சிவன் கேட்டிருக்கிறார்.அதற்கு ஸ்ரேயாஸ்,.தனுஷ் சாரை கேட்காமல் நான் எப்படி அனுப்ப முடியும் என்று அவர் சொல்லி, அவரிடம் கேட்டுவிட்டு உனக்கு தகவல் சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் அவரிடம் எதற்கு இதையெல்லாம் கொண்டு செல்ல வேண்டும்; நீயே அனுப்பிவிடு என்று வற்புறுத்தி இருக்கிறார்.
ஆனால், மிகவும் ஸ்ரேயாஸ் உஷாராக முடியாது என்று சொல்லி இதை தனுஷிற்கு கொண்டு சென்றுவிட்டார்; ஆனால்,.தனுஷ் முடியாது என்று கூறிவிட்டார். இந்த நிலையில் தனுசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுப்பதற்கான வேலைகளை நயன்தாரா தரப்பு செய்திருக்கிறது. அது அரசியல் ரீதியாக இருந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் கடைசிவரை தனுஷ் அசரவே இல்லை. இவ்வளவு.அடம் பிடித்து.ஏன் அந்த படத்தில் உள்ள காட்சிகள்,.வரிகளை கேட்கிறார்கள் என்றால், நயன்தாராவுக்கும் விக்னேஷ் இவனுக்கும் இடையே காதல் பூத்த தருணத்தில், அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எழுதப்பட்டன..அதனால் அதன் பாடல்கள் இல்லாமல் நயன்தாராவின் ஆவணப்படம் முழுமை அடையாது என்பதே அதற்கான முழு காரணம்.
ஒரு கட்டத்தில், எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்று தெரிந்தவுடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும்,.அதன் மூலம் தனுஷின் இமேஜையை காலி செய்ய போவதாகவும் மிரட்டி இருக்கிறார்கள்.
இதையடுத்து தான் தனுஷ் கோபமடைந்து அவர்கள் செய்வதை செய்யட்டும் என்று சென்றுவிட்டார். இதற்கிடையே நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தின் படி ஆவணப்படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதால், கொடுத்த தொகையை திருப்பி கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தனுஷும் நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் பட காட்சிகள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆக, இரண்டு வியாபாரிகளுக்குள் நடந்த இந்த பிரச்சனைக்கு, வேறு கலர் பூசி, இதை வெளியே காண்பித்திருக்கிறார் நயன்தாரா. " என்று பேசி இருந்தார்.
டாபிக்ஸ்