'பெண்ணியம் ஆடைக்குறைப்பில் இல்லை.. கடமைகளில் இருக்கு.. அம்மா, அப்பாவுக்கு கொள்ளிவைச்சேன்’: சிறகடிக்க ஆசை சுஜாதா பேட்டி
‘அம்மா தவறியபோது, எங்க அம்மாவுக்கு சில சடங்குகள் எல்லாம் செய்யல. என் அப்பாவே ரொம்ப முற்போக்குவாதிதான்’ என சிறகடிக்க ஆசை சுஜாதா பேட்டியளித்திருக்கிறார்.

ஈசன் திரைப்படத்தில் ‘ஜில்லா ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையைக்கேளுய்யா’ பாடி, கவனம் ஈர்த்தவர், டான்ஸ் மாஸ்டர், சுஜாதா. தற்போது, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும், சிறகடிக்க ஆசை சீரியல் மூலம், சிறகடிக்க ஆசை சுஜாதா எனப் புகழ் பெற்றிருக்கிறார். அந்த சீரியலில், இவர் நடித்திருக்கும் சிந்தாமணி கேரக்டர், பெரியளவில் ஹிட்டடித்திருக்கிறது. அவரிடம் கலாட்டா பிங்க் யூடியூப் சார்பில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு சிறகடிக்க ஆசை சுஜாதா அளித்த பதில்கள் குறித்துப் பேசலாம்.
’அம்மாவுக்கு கொள்ளி நீங்க தான் வைச்சீங்கன்னு சொன்னாங்க? அதுபற்றி?
ஆமா. அதேமாதிரி, அப்பாவுக்கும் கொள்ளி நான் தான் வைச்சேன். நீ 10 மணிக்குப் போனால், நான் 11 மணிக்கு வருவேன் என்பது பெண்ணியம் கிடையாது. செய்யக்கூடிய கடமைகளை மகளாகவும், மகனாகவும் இருந்து நான் தான் செய்தேன். எங்கவீட்டில் இரண்டு பிறந்த இரண்டுபேருமே பெண்கள் தான். என் அப்பா தவறும்போது, என் மடியில் தான் இறந்து போனார். அவர் மடியில் நான் வளர்ந்தேன். அவர் என் மடியில் தவறிட்டார். நான் என்னுடைய கடமைகள் எல்லாத்தையும் செய்தேன். ஆண்கள் மாதிரி வேஷ்டி கட்டிக்கொண்டு, தான் ஈமக்கிரியைகளை செய்தேன். எங்களது நடன சங்கத்தில் இருக்கும் பெண் நடன அமைப்பாளர்கள், அப்பாவின் உடம்புக்கு முன், டான்ஸ் ஆடுறாங்க. அம்மா தவறும்போதும், பையனாகவும் பொண்ணாகவும் இருந்து நான் தான் கொள்ளி வைச்சேன். என் பையனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருந்தது. அவன் வைக்கனும் இருந்தான். பிறகு யோசிச்சிட்டு, நானே கொள்ளிவைச்சிட்டேன்.