'பெண்ணியம் ஆடைக்குறைப்பில் இல்லை.. கடமைகளில் இருக்கு.. அம்மா, அப்பாவுக்கு கொள்ளிவைச்சேன்’: சிறகடிக்க ஆசை சுஜாதா பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'பெண்ணியம் ஆடைக்குறைப்பில் இல்லை.. கடமைகளில் இருக்கு.. அம்மா, அப்பாவுக்கு கொள்ளிவைச்சேன்’: சிறகடிக்க ஆசை சுஜாதா பேட்டி

'பெண்ணியம் ஆடைக்குறைப்பில் இல்லை.. கடமைகளில் இருக்கு.. அம்மா, அப்பாவுக்கு கொள்ளிவைச்சேன்’: சிறகடிக்க ஆசை சுஜாதா பேட்டி

Marimuthu M HT Tamil Published May 05, 2025 02:34 PM IST
Marimuthu M HT Tamil
Published May 05, 2025 02:34 PM IST

‘அம்மா தவறியபோது, எங்க அம்மாவுக்கு சில சடங்குகள் எல்லாம் செய்யல. என் அப்பாவே ரொம்ப முற்போக்குவாதிதான்’ என சிறகடிக்க ஆசை சுஜாதா பேட்டியளித்திருக்கிறார்.

'பெண்ணியம் ஆடைக்குறைப்பில் இல்லை.. கடமைகளில் இருக்கு.. அம்மா, அப்பாவுக்கு கொள்ளிவைச்சேன்’: சிறகடிக்க ஆசை சுஜாதா பேட்டி
'பெண்ணியம் ஆடைக்குறைப்பில் இல்லை.. கடமைகளில் இருக்கு.. அம்மா, அப்பாவுக்கு கொள்ளிவைச்சேன்’: சிறகடிக்க ஆசை சுஜாதா பேட்டி

’அம்மாவுக்கு கொள்ளி நீங்க தான் வைச்சீங்கன்னு சொன்னாங்க? அதுபற்றி?

ஆமா. அதேமாதிரி, அப்பாவுக்கும் கொள்ளி நான் தான் வைச்சேன். நீ 10 மணிக்குப் போனால், நான் 11 மணிக்கு வருவேன் என்பது பெண்ணியம் கிடையாது. செய்யக்கூடிய கடமைகளை மகளாகவும், மகனாகவும் இருந்து நான் தான் செய்தேன். எங்கவீட்டில் இரண்டு பிறந்த இரண்டுபேருமே பெண்கள் தான். என் அப்பா தவறும்போது, என் மடியில் தான் இறந்து போனார். அவர் மடியில் நான் வளர்ந்தேன். அவர் என் மடியில் தவறிட்டார். நான் என்னுடைய கடமைகள் எல்லாத்தையும் செய்தேன். ஆண்கள் மாதிரி வேஷ்டி கட்டிக்கொண்டு, தான் ஈமக்கிரியைகளை செய்தேன். எங்களது நடன சங்கத்தில் இருக்கும் பெண் நடன அமைப்பாளர்கள், அப்பாவின் உடம்புக்கு முன், டான்ஸ் ஆடுறாங்க. அம்மா தவறும்போதும், பையனாகவும் பொண்ணாகவும் இருந்து நான் தான் கொள்ளி வைச்சேன். என் பையனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருந்தது. அவன் வைக்கனும் இருந்தான். பிறகு யோசிச்சிட்டு, நானே கொள்ளிவைச்சிட்டேன்.

அதுதான், பெண்ணியம் என்பது ஆடைக்குறைப்பில் இல்லை. செய்யவேண்டிய கடமைகளைத் தட்டிக்கழிக்காமல், செய்றதுதான் பெண்ணியம்.

சொந்த பந்தங்கள் பெண் கொள்ளிவைக்கக் கூடாதுனு சொல்லலையா?

என் அப்பா இறப்பதற்கு முன் கூட, ஏன் இப்படி பெண்களைப்போட்டு, இவ்வளவு சடங்குகள் செய்யச்சொல்லி, டார்ச்சர் பண்றாங்கன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பார். அதனாலேயே, அம்மா தவறியபோது, எங்க அம்மாவுக்கு சில சடங்குகள் எல்லாம் செய்யல. என் அப்பாவே ரொம்ப முற்போக்குவாதிதான்.

பெண்கள் எமோஷனாலாக வீக்குன்னு சொல்வாங்க. ஆனால், நீங்க அந்த ரியாலிட்டியை உடைச்சு, சுடுகாட்டுக்குப் போய், அம்மா, அப்பாவுக்கு கொள்ளிவைச்சிருக்கீங்க. அந்த உணர்வு எப்படி இருந்தது?

அம்மா கண் முன்னாடி எரிஞ்சு போறதை யாரும் பார்க்கமுடியாது. இப்போது எல்லாம் மின்சார சுடுகாடு தானே. அதனால், நெஞ்சில் கற்பூரம் வைச்சு, ஏத்தச் சொல்றாங்க. அம்மா உள்ளே போறதையெல்லாம், என்னால் நிச்சயம் பார்க்கமுடியல. அது வைச்சதும் மயக்கம் அடிச்சி விழுந்திட்டேன். பார்க்கவும் முடியாது.

இவ்வளவு நாளாகப் பெத்து வளர்த்து, தூண் மாதிரியும் இருந்து நல்ல மனுஷியாக வளர்த்து இருக்காங்க. அம்மாவுக்கு சுகர் வந்து கால்விரல்கள் எடுத்தபிறகும், அதனை என்னால் பார்க்கமுடியலை.

எங்க அம்மா கால் அம்சமாக அழகாக இருக்கும். இப்போதுவரைக்கும், அம்மாவுடைய நிறைய போட்டோஸ், வீடியோஸ் பிள்ளைகள் எடுத்து வைச்சிருக்காங்க. அதைப் பார்த்தால், எமோஷனலாகிடுவேன். அதனால், உடனே ஸ்க்ரால் பண்ணிடுவேன்.

கல்யாணம் பண்ணிப்போனதுக்கு அப்புறம் நிறையபேர் அம்மா, அப்பாவுக்கு முக்கியத்துவம் தரது இல்லை. எனக்குன்னு ஒரு புருஷன் வந்திட்டார்னு சுயநலவாதியாக இருக்கக் கூடாது இல்லை. எனக்கு அந்த திருப்தி போதும்.

இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியாக கலக்கிட்டு இருக்கீங்க? அது பற்றி சொல்லுங்க?

எப்போதும் முயற்சி செய்துகொண்டே இருப்பேன். இதுபோதும் என சலித்துக்கொண்டது கிடையாது. பசங்ககிட்ட அதுதான் சொல்வேன். எனக்கு ஏதாவது ஆச்சு என்றால், அது என் சூட்டிங் ஸ்பாட்டில் தான் நடக்கணும் என்றுசொல்வேன். எனக்கு கை, கால் நல்லாயிருக்கும்வரை, மேக்கப் போடணும். எனக்கு வீட்டில் டிவி பார்க்கக் கூட பிடிக்காது. வீட்டில் இருந்தால், எம்பிராய்டரி ஒர்க், மிரர் ஒர்க், பாட் ஒர்க் அப்படின்னு தேடிட்டே இருப்பேன்.

சிந்தாமணி கேரக்டர் பற்றி சொல்லுங்க?

எல்லாபேரும் ஏங்க மீனாவை டார்ச்சர் பண்றீங்கன்னு கேட்குறாங்க. அது சும்மா நடிப்புமான்னு சொல்லிடுவேன். வில்லி கேரக்டர் என்பதால் தான், நீங்க என்ன கேட்குறீங்க. நல்ல அம்மா கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்காது. அதனால் நடிக்கிறேன்'’ என சிறகடிக்க ஆசை சுஜாதா பேசியிருக்கிறார்.