சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 26 எபிசோட் : ரோகிணியை வீட்டை விட்டு துரத்திய விஜயா.. அடுத்த பிளான் போடும் ரோகிணி!
சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 26 எபிசோட் : மனோஜ் தனது நண்பர் உடன் பார் சென்று என் மனைவி என்னை ஏமாற்றி விட்டாள் என புலம்பிக்கொண்டே குடிக்கிறார். சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 26 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோட் தொடர்ச்சியாக இன்று விஜயா ரோகிணியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அப்போது அண்ணாமலை விஜயா இப்படி செய்யாதே ரோகிணி என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்போம் என சொல்கிறார். அதற்கு விஜயா அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை இவள் சொல்வதெல்லாம் பொய்யாக தான் இருக்கும் இனி இவள் சொல்வதை நான் கேட்க போவதில்லை என சொல்லி வீட்டை விட்டு போக சொல்கிறார்.
ஆனால் ரோகினி வீட்டை விட்டு போக மாட்டேன் என்ன சொல்கிறார். மனோஜிடம் சென்று பேசுகிறார். ஆனால் மனோஜ் பேசாமல் மௌனம் காக்கிறார். பின்னர் நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என விடாப்படியாக ரோகிணி நிக்க விஜயா தலைமுடியைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். பின்னர் இந்த ஜென்மத்தில் நீ இந்த வீட்டிற்குள் வர முடியாது என சொல்லி ரோகிணி ஹேண்ட்பேகை காலில் எட்டி உதைத்து வெளியில் தள்ளுகிறார் விஜயா.
வித்யா மீது கோபம் கொள்ளும் ரோகிணி
அதன் பிறகு அண்ணாமலை ரோகிணியை போய் அழைத்து வா அவள் என்ன சொல்கிறார் என்று கேட்போம் என மனோஜிடம் சொல்ல மனோஜ் போக மாட்டேன் என சொல்கிறார். பின்னர் அண்ணாமலை வற்புறுத்த விஜயா மனோஜை போக வேண்டாம் என தடுக்கிறார். அதன் பிறகு ரோகிணி வித்யாவை சந்திக்கிறார் வித்யாவை சந்தித்து நடந்ததை எல்லாம் கூறுகிறார். அப்போது வித்யா நீ போன கல்யாணம் இந்த கல்யாணமா என பத்திரிகையை காட்டுகிறார். இது மணி எனக்கு கொடுத்தது என சொல்கிறார். இதை முன்னாடியே சொல்லி இருந்தால் நான் இந்த விஷயத்தில் மாட்டியிருக்க மாட்டேன் என சொல்ல வித்தியா எனக்கு எப்படி இது தெரியும்? இப்படி எல்லாம் நடக்கும் என நான் கனவா கண்டேன் என சொல்கிறார்.
பின்னர் ரோகினி இந்த விஷயத்தில் இனி நான் வேற மாதிரி முடிவெடுக்க போகிறேன் என சொல்லிவிட்டு இதில் நான் அழப்போவதில்லை என்னை அவர்கள் வெளியில் அனுப்பியது நல்லது தான் என சொல்லிவிட்டு வித்யாவிடம் காபி கொண்டு வா என சொல்லி ரூமுக்கு செல்கிறார்.
அண்ணாமலை சொல்லும் அட்வைஸ்
பின்னர் முத்துவும் மீனாவும் வீட்டில் அமர்ந்து நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ் கிச்சனுக்கு சென்று தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கிறார். ஏன் இவர் இப்படி செய்து கொண்டிருக்கிறார் என மீனா கேட்க அவன் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை என முத்து சொல்கிறார். அண்ணாமலை அந்த சமயத்தில் அங்கு வந்து மனோஜை அழைத்து நீ ரோகிணியை கூட்டி வா அவள் என்ன சொல்கிறார் என்று நாம் கேட்போம் என சொல்ல நான் கூட்டி வரமாட்டேன் என மனோஜ் சொல்கிறார்.
முத்துவும் நீ செய்வது தப்பு என சொல்ல அதற்கு என் விஷயத்தை நீ தலையிடாதே என மனோஜ் சொல்கிறார். பின்னர் மீனா மாமா சொல்வது சரிதான் நீங்கள் ரோகிணியை அழைத்து வர வேண்டும் நாம் ஒரே குடும்பம் இதில் நாம் தான் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பது போல மீனா சொல்கிறார். ஆனால் மனோஜ் பிடிவாதமாக அம்மா சொன்னால் மட்டும்தான் நான் ரோகிணியை அழைத்து வருவேன் என உறுதியாக சொல்கிறார். பின்னர் அண்ணாமலையிடம் என் விஷயத்தில் நீங்கள் யாரும் தலையிட வேண்டாம் என சொல்லிவிட்டு செல்கிறார். பிறகு மனோஜ் தனது நண்பர் உடன் பார் சென்று என் மனைவி என்னை ஏமாற்றி விட்டாள் என புலம்பிக்கொண்டே குடிக்கிறார். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.

தொடர்புடையை செய்திகள்