சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 21 எபிசோட் : கடும் கோபத்தில் மீனா.. கடுப்பான முத்து.. கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 21 எபிசோட் : கடும் கோபத்தில் மீனா.. கடுப்பான முத்து.. கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா?

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 21 எபிசோட் : கடும் கோபத்தில் மீனா.. கடுப்பான முத்து.. கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா?

Divya Sekar HT Tamil Published Mar 21, 2025 11:17 AM IST
Divya Sekar HT Tamil
Published Mar 21, 2025 11:17 AM IST

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 21 எபிசோட் : கறிக்கடைக்காரர் மணி இன்றாவது முத்து, மீனா கண்ணில் சிக்குவாரா? சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 21 எபிசோட் : கடும் கோபத்தில் மீனா.. கடுப்பான முத்து.. கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா?
சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 21 எபிசோட் : கடும் கோபத்தில் மீனா.. கடுப்பான முத்து.. கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா?

இதை பார்த்த மனோஜ் விஜயவிடம் சென்று சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டும் இல்லை என்றால் அவமானம் தான் மிஞ்சும் என சொல்கிறார். என்ன ஆனது என விஜயா கேட்க முத்து இங்கேயும் குடிக்க ஆரம்பித்து விட்டான். அவன் கையில் பாட்டில் வைத்திருக்கிறான் என சொல்ல இதனை விஜயா அண்ணாமலையிடம் சொல்கிறார். அண்ணாமலை அவன் அப்படி செய்ய மாட்டான் என சொல்ல இல்லை மனோஜ் அவன் கையில் பாட்டில் இருப்பதை பார்த்து தான் சொல்கிறான் என சொல்கிறார்.

முத்து மீது கோபம் கொள்ளும் மீனா

பின்னர் அண்ணாமலை மீனவை அழைத்து முத்துவை கவனித்துக் கொள். இங்கேயும் வந்து குடிக்க போகிறான் என சொல்ல அவர் அப்படி செய்ய மாட்டார் என மீனா சொல்ல இல்லை மனோஜ் பார்த்துவிட்டு சொல்கிறான் என சொல்கிறார். பின்னர் முத்துவை தேடி மீனா மண்டபத்தில் அலைகிறார். அப்போது முத்து மீது எதிர்பாராத விதமாக சரக்கு ஊற்றி விடுகிறது. மாப்பிள்ளை நண்பர்கள் வரும் போது முத்து மீது சரக்கை ஊற்றி விடுகிறார்கள். அப்போது முத்து என்னையே தேடி வந்து இடிப்பீர்களா என சண்டை போட்டுவிட்டு ஓரமாக போய் யாரும் இல்லாத இடத்தில் குடிங்கள் என அட்வைஸ் செய்துவிட்டு செல்கிறார்.

பின்னர் முத்துவை மீனா பார்க்கிறார். அப்போது முத்து மீது ஸ்மெல் வருகிறது. இதனால் கோபம் அடையும் மீனா இன்றைக்கும் குடிக்காமல் இருக்க முடியாத என திட்டுகிறார். முத்து நான் குடிக்கவில்லை என சொல்ல ஆனால் மீனா நம்பாமல் தொடர்ந்து முத்துவை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ரவி முத்து மீது ஸ்மால் வருவதை பார்த்து இன்றைக்கும் குடிப்பியா என கேள்வி கேட்கிறார். ஆனால் முத்து நான் குடிக்கவே இல்லை என சொல்ல இருவரும் நம்பாமல் முத்துவை சேர்ந்து திட்டுகிறார்கள்.

இன்றும் தப்பித்த மணி

பின்னர் முத்து இருவரையும் அழைத்து முத்து மீது இடித்த இருவரையும் தேடி அலைகிறார். அப்போது அந்த இடத்தில் கறிக்கடைக்காரர் மணி இருக்கிறார். ஆனால் அவர்கள் மூவரும் அவரை கவனிக்கவில்லை. பின்னர் முத்து சட்டையை மாற்றி விட்டு ரவியிடம் ஊதி காட்டுகிறார். அப்போதுதான் முத்து குடிக்கவில்லை என இருவரும் நம்புகிறார்கள்.

பின்ன சமையல் வேலை முடிந்ததும் கறிக்கடைக்காரர் மணியை சந்தித்த பரசு வேலை எல்லாம் முடிந்துவிட்டது என்றால் என் நண்பர் அண்ணாமலையை சந்திக்கலாம் என அழைத்துச் செல்கிறார். அண்ணாமலை நெருங்கும் போது சமையல் செய்யும் நபர் ஒருவர் குழம்பு கொதித்து விட்டது வந்து பார்த்து விட்டீர்கள் என்றால் இறக்கி விடலாம் என கறிக்கடைக்காரர் மணியை அழைத்து செல்கிறார். பின்னர் பிறகு உங்கள் நண்பரை சந்திக்கிறேன் என சொல்லிவிட்டு அவரும் செல்கிறார். இப்படியாக இந்த எபிசோடில் யாரும் கரைக்கடைக்காரர் மணியை பார்க்கவில்லை. இன்றைய எபிசோடு இதோடு நிறைவடைந்தது. நாளை எபிசோடில் ஆவாது அது நடக்குமா? இல்லை இன்னும் பல எபிசோடுகள் செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.