Singer Suchitra: என்ன வள்ளுவரா? கேவலமா இருக்கு.. வைரமுத்துவை கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா
Singer Suchitra: அவர் என்ன பெரிய பாடல் வரி எழுதிவிட்டார்? பெண்களை குறி வைத்து மட்டும் தான் அவர் எழுதுவார். ' மே மாசம் 98 ' -ல் பாடல் வரி எப்படி இருக்கிறது. எனக்கு அந்த பாடல் பிடிக்கவே இல்லை என பாடகி சுசித்ரா கூறினார்.

வைரமுத்து, அவருடன் படுக்கையை பகிர்வதற்காக ஷாம்பு பாட்டிலை பரிசாக கொடுத்த கதையை பாடகி சுசித்ரா பகிர்ந்து இருந்தார். அதற்கு வைரமுத்து, பாடகி சுசித்ரா என்று பெயர் கூறிப்பிடாமல் நேற்று ( செப் 20 ) எக்ஸ் தளத்தில் தக்க பதிலடி கொடுத்தார். அவர் பதிவு வெளியிட்டவுடன், பலரும் பாடகி சுசித்ராவுக்கு எதிராகவும், வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பேச ஆரம்பித்தார்கள்.
இதனால் கடுப்பான பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், “ வைரமுத்து என்ன வள்ளுவரா? அவர் என்ன பெரிய பாடல் வரி எழுதிவிட்டார்? பெண்களை குறி வைத்து மட்டும் தான் அவர் எழுதுவார். ' மே மாசம் 98 ' -ல் பாடல் வரி எப்படி இருக்கிறது. எனக்கு அந்த பாடல் பிடிக்கவே இல்லை. கேவலமாக இருந்தது. முதல் ரெகார்டிங் என்பதால் எதுவும் சொல்லவில்லை. அப்போதே முடிவு செய்துவிட்டேன் அடுத்த ரெகார்டிங்கில் சொல்லிவிட வேண்டும் என்று. வளர்ந்து வரும் எந்த ஒரு புதிய லிரிசிஸ்ட்டையும் அவர் வளர விடுவது இல்லை.
பெரிய லிரிசிஸ்ட் வாலி
என்னை பொறுத்தவரை பெரிய லிரிசிஸ்ட் வாலி தான். அவர் தான் நேர்மையாக பேசுவார். அவர் எழுதிய வரியில் நான் நிறைய பாடி இருக்கிறேன். ஒரு முறை கூட அவர் இழிவாக பேசியதே இல்லையே.