‘யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!

‘யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 16, 2025 01:19 PM IST

ஜெயம் ரவியும் கெனிஷாவும் என்ன தவறு செய்தார்கள். சினிமா உலகில் யாருமே செய்யாத தவறையா ஜெயம் ரவி செய்து விட்டார்; எல்லோரும் கமுக்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள். - சுசித்ரா

‘யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!
‘யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!

இதனைதொடர்ந்து நேற்றைய தினம் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஆர்த்தி எப்போதும் தனக்கு முன்னாள் மனைவிதான் என்றும் குழந்தைகளை தான் கவனிக்க வில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு; தன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று காட்டமாக பேசி இருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பலரும் பல்வேறு விதமாக பேசி வரும் நிலையில், பாடகி சுஜித்ரா இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

யாரும் செய்யாத தவறா அது?

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ஜெயம் ரவியும் கெனிஷாவும் என்ன தவறு செய்தார்கள். சினிமா உலகில் யாருமே செய்யாத தவறையா ஜெயம் ரவி செய்து விட்டார்; எல்லோரும் கமுக்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் விஷயத்தில் ஆரம்பத்தில் விஷயம் மறைவாக இருந்தது; இப்போது வெளிப்படையாக தெரிகிறது. தற்போது எல்லாம் சரியாகத்தானே சென்று கொண்டிருக்கிறது.

அந்தப் பெண்ணுக்கு அவர் எவ்வளவு அங்கீகாரம் கொடுத்து நடத்துகிறார். இத்தனை வருடங்கள் வொர்க் ஆகாத கல்யாணத்திற்கு ஒருத்தி உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாள்.

அவருடைய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்து நீங்கள் அவருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் கெனிஷா என்ன தவறு செய்தார். அவரது ஆடைகளை பற்றியெல்லாம் பேசுகிறீகள்.

ஆண்ட்ரியா போட்டதைதான் கெனிஷாவும்..

யாரும் மேடைகளில் பயன்படுத்தாத ஆடைகளையா கெனிஷா பயன்படுத்துகிறார்; ஆண்ட்ரியா மேடையில் பாடும் பொழுது என்னவிதமான ஆடுகளை அணிந்து பாடுகிறாரோ அதைத்தான் இவரும் அணிந்து கொண்டு பாடுகிறார்.

உங்களது மகள்கள் அதுபோன்ற ஆடைகளை அணிவது இல்லையா..? மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளில் வாழக்கூடிய சின்ன குழந்தைகள் கெனிஷா அணிவது போல ஆடைகளை அணிந்து ரில்களை பதிவிடுவது இல்லையா..?

சின்ன குழந்தைகள் அவர்களது அம்மா அப்பா முன்னிலையில் அதுபோன்ற ஆடைகளை அணிகிறார்கள் என்றால் அது தவறு. ஆனால் வளர்ந்தவர்கள், அது வயதுக்கு வந்த பெண்ணாக இருக்கலாம் அல்லது ஆணாக இருக்கலாம் அவர்களுக்கு அவர்களது ஆடைகளை தேர்வு செய்வதற்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது.

அவர்களது ஆடைகள் என்பது அவர்கள் சந்தித்த அனுபவங்களின் வழியே அவர்கள் தேர்ந்தெடுப்பது. வாழ்க்கையில் நிறைய டிராமா (கஷ்டங்கள்) இருந்தால் அவர்கள் இப்படியாகத்தான் ஆடைகளை அணிந்து கொள்வார்கள். இதுவும் ஒரு வகையிலான சிகிச்சைதான்.. கெனிஷா ஒன்றும் கஷ்டப்படாமல் மேலே வந்தவர் கிடையாது.

ஆடைகள் குறித்தான முடிவெடுப்பது என்பது உங்களது வயதை பொறுத்து இருக்கிறது தவிர்த்து உங்களுடைய உடல் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தது அல்ல..

ஜெயம் ரவி கெனிஷா இருவரும் பொதுவெளியில் தங்களை வெளிப்படையாக காண்பித்துக்கொண்டு விட்டார்கள். இதை விட உங்களுக்கு வேறென்ன வேண்டும். இதைவிட கண்ணியமாக ஒரு கல்யாணத்திற்கு எப்படி வர முடியும்.

கெனிஷா சற்று அசெளகரியமாக உணரும் போது ஜெயம் ரவி அவர் கைப்பிடித்து காருக்குள் ஏற்றி விட்டார். இதனை இன்ஃப்ளூயன்சியர்கள் செய்தால் நீங்கள் கைதட்டுகிறீர்கள்; இவர்கள் செய்தால் நீங்கள் காரி துப்புகிறீர்கள் ஏன்’ என்று பேசினார்.