Shweta Mohan: ‘அவர அங்கதான் முதல்ல பார்த்தேன்.. நோ மீன்ஸ் நோ தான்.. குழந்தைய ரொம்ப கவனமா’ - ஸ்வேதா காதல் கதை!
என்னுடன் அன்றைய தினம் என்னுடைய தோழி வந்திருந்தாள் நான் உடைந்து போய் அழுவதை பார்த்த அவள், தயவுசெய்து இன்று என்னுடன் வீட்டுக்கு வா என்று சொல்லி,அவளது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றாள். அங்கு தான் அவளுடைய சகோதரரும், இன்று என்னுடைய கணவராக இருக்கும் அஸ்வினை சந்தித்தேன்.
பிரபல பாடகியான ஸ்வேதா மோகன் தன்னுடைய காதல் கணவர் குறித்தும், குழந்தை குறித்தும் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசினார்.
அவர் பேசும் போது, “வாழ்க்கையில் ஈகோவால் வரக்கூடிய சில முரண்பாடுகளால், சில பேர் புண்படலாம். அதனால் நமக்கு வரக்கூடிய தடைகள், நம் மனதை நிச்சயமாக புண்படுத்துவதாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் பின்னால் பார்க்கும் பொழுது, அவை நம்மை, நம்முடைய வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் புரிதலோடு நடப்பதற்கு உதவிகரமாக இருந்திருக்கின்றன.
என்னுடைய குணங்களில் எனக்கு மிகவும் பிடித்தது, எனக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் வந்தாலும், அதனுடைய பாசிட்டிவான பக்கத்தையே பார்ப்பது.
அதாவது, எனக்கு ஒரு பிரச்சினை அரங்கேறும் பொழுது, அதிலிருந்து நான் என்ன கற்றுக் கொள்கிறேன். அதன் மூலமாக எனக்கு என்ன நல்லது நடக்கிறது என்பதில் என்னுடைய கவனம் இருக்கும்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் நான் பாடகராக பங்கேற்று இருந்தேன். அது நான் நன்றாக பாடிக் கொண்டிருந்த சமயம். அதனால் அந்த நிகழ்ச்சியில் எனக்கு நிச்சயமாக பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். போட்டியின் இறுதியில் மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டது. அதில் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை.
அதன் காரணமாக நான் மிகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டு உடைந்து போயிருந்தேன். இதற்கிடையில் நிகழ்ச்சி நடத்தியவர்கள் சார்பில் இருந்து, இந்த மூன்று பேரையும் தவிர்த்து, இன்னும் இங்கு பல திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்று கூறி பத்து பேர் கொண்ட பட்டியலை அறிவித்தார்கள். அந்த பட்டியலிலும் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. அதைக்கேட்டு பயங்கரமாக அழுது விட்டேன்.
என்னுடன் அன்றைய தினம் என்னுடைய தோழி வந்திருந்தாள் நான் உடைந்து போய் அழுவதை பார்த்த அவள், தயவுசெய்து இன்று என்னுடன் வீட்டுக்கு வா என்று சொல்லி,அவளது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றாள். அங்கு தான் அவளுடைய சகோதரரும், இன்று என்னுடைய கணவராக இருக்கும் அஸ்வினை சந்தித்தேன்.
அன்று அவர்தான் வந்து கதவை திறந்தார். அங்கு ஆரம்பித்த அந்த பழக்கம் காதலாக மாறி, தற்போது கல்யாணத்தில் முடிந்து இருக்கிறது. எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இன்று குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அவர்களுக்கு எதற்கு நோ சொல்ல வேண்டும். எதற்கு சொல்ல கூடாது என்பதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.
ஒரு விஷயத்திற்கு உங்களுக்கு நோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது என்றால், கண்டிப்பாக நீங்கள் நோ என்று தான் சொல்ல வேண்டும். காரணம், அதிலிருந்து கிடைக்கக்கூடிய அதிகாரம் உங்களை வேறு மாதிரியாக உணரச்செய்யும்.
அதனால் உங்களுக்கு நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி அதை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் நோ சொல்ல வேண்டிய விஷயத்திற்கு நீங்கள் நோ சொல்லியே ஆக வேண்டும்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்