பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாடகி ஸ்ரேயா கோஷல் தனது சூரத் இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாடகி ஸ்ரேயா கோஷல் தனது சூரத் இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து ஸ்ரேயாவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு செய்தியை தெரிவித்தனர்.
ஸ்ரேயா கோஷல் சூரத் நிகழ்ச்சி ரத்து
ஸ்ரேயா கோஷலின் ஆல் ஹார்ட்ஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி ஏப்ரல் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சூரத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "சமீபத்திய துயர சம்பவங்களை முன்னிட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர் இணைந்து இந்த சனிக்கிழமை, ஏப்ரல் 26ஆம் தேதி சூரத் நகரில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.