மீண்டும் தலைதூக்கும் மகேஷின் காதல்.. திணறி நிற்கும் அன்பு - இனி என்ன நடக்குமோ?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மீண்டும் தலைதூக்கும் மகேஷின் காதல்.. திணறி நிற்கும் அன்பு - இனி என்ன நடக்குமோ?

மீண்டும் தலைதூக்கும் மகேஷின் காதல்.. திணறி நிற்கும் அன்பு - இனி என்ன நடக்குமோ?

Aarthi Balaji HT Tamil
Dec 17, 2024 10:32 AM IST

45 நாட்களுக்குள் எப்படியாவது ஆனந்தியின் அக்கா கோகிலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் மும்மரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மீண்டும் தலைதூக்கும் மகேஷின் காதல்.. திணறி நிற்கும் அன்பு - இனி என்ன நடக்குமோ?
மீண்டும் தலைதூக்கும் மகேஷின் காதல்.. திணறி நிற்கும் அன்பு - இனி என்ன நடக்குமோ?

மித்ராவின் சதித்திட்டம்

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மித்ரா, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஹாஸ்டல் பாத்ரூமிற்கு வெளியே சோப்புத் தண்ணீரை ஊற்றி ஆனந்தியின் கையை உடைத்தனர்.

இதனால், ஆனந்தி கார்மெண்ட்ஸிற்கு வந்து எந்த வேலையும் செய்ய முடியாது என நினைத்தனர். ஆனால், ஆனந்தி தன் அக்காவின் திருமண செலவிற்காக காசு ரெடி பண்ண வேண்டும். அதற்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை எனக் கூறி, உடைந்த கையை வைத்துக் கொண்டு கம்பெனிக்கு வருகிறாள். அதை சற்றும் மித்ராவால் ஏற்று கொள்ள முடியவில்லை.

சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இன்றைய ப்ரோமோ

அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது இன்னும் மகேஷுக்கு  தெரிய வராததால் எப்போதும் போல் தனது காதலுக்கு அன்புவை நாடுகிறார். அன்பு விடம் சென்ற மகேஷ், " ஏற்கனவே நான் கொடுத்த பரிசை ஆனந்தி, அழகன் கொடுத்ததாக நினைத்து விட்டாள்.

அதனால் இந்த முறை அந்த தவறு நடக்க கூடாது அன்பு" என்றார். வழக்கம்போல் என்ன சொல்வது என்று தெரியாமல் அன்பு முழித்துக் கொண்டே இருக்கிறார்.

கோகிலா திருமணம்

மறுபக்கம் 45 நாட்களுக்குள் எப்படியாவது ஆனந்தியின் அக்கா கோகிலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் மும்மரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். கோகிலாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்திருக்கும் நிலையில் அவரது தாய் எங்கள் நிலைமையை பார்த்து யோசித்து முடிவை சொல்லுங்கள் என்றார்.

அன்புவிடம், ஆனந்தி " நீங்கள் எனக்கு எவ்வளவோ உதவி செய்கிறீர்கள் ஆனால் எனக்கு தான் எதுவும் சரியாக வரவே இல்லை என்று கூறி கவலைப்படுகிறார். வழக்கம்போல் அன்பு தனது ஆசை காதலி ஆனந்தியை சமாதானம் செய்து உணவை ஊட்டி விட்டார். அந்த நேரம் பார்த்து மகேஷ், அன்பு என்று அழைத்துக் கொண்டே உள்ளே வருவது போல் இன்றைய எபிசோடிர்கான ப்ரமோ முடிந்தது.

முன்னதாக நடந்தது என்ன?

இரவு ஆனந்தி ஹாஸ்டல் பாத்ரூமில் இருப்பதை அறிந்த மித்ரா, அவரது நண்பர்கள் துணையுடன் ஆனந்தி இருக்கும் பாத்ரூம் அறையின் கதவை தட்டினாள். பின் ஆனந்தி வருவதற்குள் வெளியில் சோப்பு நுரை தண்ணீரை கொட்டிவிட்டு தப்பிச் சென்றாள்,

தன்னை கூப்பிடும் சத்தம் கேட்ட ஆனந்தி கீழே கால் வைக்கும் போது வழுக்கி விழுந்து கையில் பயங்கரமாக அடிபட்டுள்ளது. இதனால், எழுந்து நிற்க முடியாமல் பயங்கரமாக கத்தி அழுதாள். ஆனந்தியின் குரலைக் கேட்டு அந்தப் பக்கம் வந்த வார்டன் ஆனந்தியை காப்பாற்றினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.