Singappenne Serial: கை விரித்த அன்பு.. மகேஷ் கொடுத்த ஷாக் - சத்தியம் கேட்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்
Singappenne Serial: அன்பு, “ ஆனந்தி பணம் கிடைத்துவிட்டது” என்று சொல்ல உடனே ஆனந்தி, “ உண்மையில் இந்த பணத்தை உங்கள் நண்பர் தான் கொடுத்தாரா? என் தலை மேல் அடித்து சத்தியம் செய்யுங்கள் “ என கேட்கிறார்.

Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ( செப் 19 ) எபிசோட் அப்டேட் தொடர்பான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், “ ஆனந்தி நான் அவர்களின் சொந்த நிலத்தை எப்படியாவது மீட்டு கொடுத்துவிடுவேன் என்று என்னை நம்பினாள், ஆனந்தி. ஆனால் என்னால் முடியவில்லை. நான் அவளுக்கு சரியான நபர் இல்லை “ என்று அன்பு வழக்கம் போல் தனது நண்பரிடம் புலம்பி கொண்டு இருந்தார்.
மகேஷ் கொடுத்த ஷாக்
அந்த நேரம் பார்த்து காரில் எண்டரி கொடுத்த மகேஷ், “ எனக்கு எல்லா விஷயமும் தெரியமும் அன்பு. இதில் 10 லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது. நான் தான் கொடுத்தேன் என்று ஆனந்திக்கு தெரிய கூடாது. என்னுடைய காதல் விஷயத்தில் மற்றவர்களை விட உன்னை நான் ரொம்ப நம்புகிறேன் அன்பு “ என்று அதிர்ச்சி கொடுத்தார். வாங்கி கொள்ளலாமா? இல்லை அப்படியே சென்று விடலாமா? என்ற குழப்பத்தில் முழித்த படி நின்று கொண்டு இருக்கிறார் அன்பு.
தலை மேல் சத்தியம்
இறுதியாக சரி எப்படியோ பணம் கிடைத்துவிட்டு என மனம் மாறி மகேஷ் கொடுத்த பணத்தை எடுத்து கொண்டு அன்பு, ஆனந்தியை பார்க்க தங்கும் விடுதிக்கு செல்கிறான். அன்பு, “ ஆனந்தி பணம் கிடைத்துவிட்டது” என்று சொல்ல உடனே ஆனந்தி, “ உண்மையில் இந்த பணத்தை உங்கள் நண்பர் தான் கொடுத்தாரா? என் தலை மேல் அடித்து சத்தியம் செய்யுங்கள் “ என்று கேள்வி கேட்பதுடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிவுக்கு வந்தது.