Singappenne: உடைந்த பொங்கல் பானை.. சுயம்புலிங்கத்துக்கு சவால்விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணேவில் நடப்பது என்ன?
Singappenne: உடைந்த பொங்கல் பானை.. சுயம்புலிங்கத்துக்கு சவால்விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணேவில் நடப்பது என்ன?

Singappenne: சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும், ’சிங்கப்பெண்ணே’ சீரியலில் இன்றைய (ஆகஸ்ட் 17) எபிசோட்டிற்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இன்றைய எபிசோடு:
சிங்கப்பெண்ணே சீரியலில் சென்னையில் இருந்து செவரக்கோட்டைக்கு வந்த அனைவரும் ஒன்றுசேர்ந்து அம்மனுக்கு மண் பானையில் பொங்கல் வைக்கின்றனர். அப்போது அந்தக் குழுவில் இருந்த பெண், பொங்கலைக் கிளற முயன்றபோது, அந்த மண்பானை கீழே விழுந்து உடைந்துவிடுகின்றது. உடனே அனைவரும் கலங்குகின்றனர். அப்போது பானையை உடைத்தது யார் என்று, சிறுமி ஒருத்திக் கேட்க, தன்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என சொல்கிறார், அந்த பொங்கல் பானையை கிளறிய இளம்பெண். இதனால், அன்பு, ஆனந்தி, மகேஷ் ஆகிய அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.
அப்போது அவ்விடத்திற்கு வரும் வில்லன் சுயம்புலிங்கம், வந்திருக்கும் டவுன்காரங்க யாராவது தப்புத்தண்டா செய்திருக்கணும். இல்லை, இந்தக் குடும்பத்தில் யாராவது சுத்தபத்தமில்லாமல் இருக்கணும் எனச் சொல்கிறார், சுயம்புலிங்கம்.