மீண்டும் வந்த அழகன்.. விழி பிதுங்கும் அன்பு.. சதித்திட்டம் தீட்டும் மித்ரா.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
தான் காதலித்த அழகன் குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக ஆனந்தி அன்பவிடம் கூறி அன்புவை விழி பிதுங்கச் செய்துள்ளார்.

ஹாஸ்டலை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனந்தி, அன்பு வீட்டில் தங்கி இருந்து தனது சின்னச் சின்ன ஆசைகளையும் அன்பு மூலம் நிறைவேற்றிக் கொண்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள். அன்பு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட நினைத்த ஆனந்தி, அன்புவின் தங்கை யமுனாவின் உதவியோடு முஸ்லீம் பெண்ணாத மாறி அன்பு வீட்டிற்குள் நுழைவார்.
அழகன் குறித்து தெரிந்து கொள்ளும் ஆனந்தி
இந்நிலையில், ஆட்டோவில் வெளியே சென்று கொண்டிருக்கும் ஆனந்தியடம், ஆட்டோ டிரைவர் அழகன் குறித்த தகவலைத் தருவார். அவர், அழகனை சில நாட்களுக்கு முன் பார்த்ததாக கூறுவார். இதைக்கேட்ட ஆனந்தி, என்ன செய்வது என்று புரியாமல் அன்புவிற்கு போன் செய்துள்ளார். அப்போது, நான் சொல்வதைக் கேட்டு கோபப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் பேசவே ஆரம்பிக்கிறார்.
விழி பிதுங்கிய அன்பு
அப்போது, அவர் அழகன் குறித்து தான் கேள்விப்பட்ட அனைத்து விஷயங்களையும் அன்புவிடம் கூறினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அன்பு விழி பிதுங்கி நின்றான்.