Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்.. சபதம் ஏற்ற அன்பு.. மகேஷை பந்தாடிய அப்பா.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: இன்னொரு பக்கம் வாட்ச்மேன் அழகனை விட அன்பு தான் உனக்கு சரியான ஆளாக இருப்பாள் என்று கூற, ஆனந்தி அன்பை பார்த்து சிரிக்கிறாள். இத்தகைய நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் இடம் பெற இருக்கின்றன - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
சிங்க பெண்ணே சீரியல் தொடர்பாக இன்று வெளியாகியிருக்கும் புரோமோவில், அன்பின் மனசாட்சி அவனுக்கு முன் தோன்றி ஆனந்தியை மகேஷ் காதலித்தாலும், அவள் காதலிப்பது அழகனை தான் என்று கூறுகிறது. இதற்கிடையே மித்ராவும் அவளது கூட்டாளியும், கம்பெனியை இந்த சமயத்தில் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் வாட்ச்மேன் அழகனை விட அன்பு தான் உனக்கு சரியான ஆளாக இருப்பாள் என்று கூற, ஆனந்தி அன்பை பார்த்து சிரிக்கிறாள். இத்தகைய நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் இடம் பெற இருக்கின்றன
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
சிங்கப் பெண்ணே சீரியலில் நேற்றைய தினம் செவரக்கோட்டையில் இருந்து அனைவரும் சென்னைக்கு கிளம்பினர். இதற்கிடையே மகேஷுக்கு போன் செய்த அவரது அப்பா, உடனடியாக நீ சென்னைக்கு கிளம்பி வர வேண்டும் என்று கட்டளையிட்டார். அதற்கு ஏதாவது சீரியஸா அப்பா என்று மகேஷ் கேட்டதும், இன்னும் கோபமான அவரது அப்பா, இன்னும் 6 மணி நேரத்தில் நீ சென்னையில் இருக்க வேண்டும் என்று கோபமாக பேசினார்.