இந்த ஒரு நாளாவது என்னை விடுங்க.. அன்புவிடம் கறார் காட்டும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
அழகன் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பும் ஆனந்தி, அன்புவிடம் தன்னை இன்று ஒருநாளாவது என் போக்கில் விடுங்கள் என கறார் காட்டி பேசியுள்ளார்.

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு தான் காதலித்த அழகன் என்பவர் குறித்த தகவல் ஆட்டோக்காரர் மூலமாக தெரியவந்ததை அடுத்து, அழகனை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆனந்தி தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து அழகனை கண்டுபிடிக்க அவர் என்னென்ன செய்கிறார் என்பதை இனிவரும் சூழலில் நாம் பார்க்கலாம். இந்நிலையில், சிங்கப்பெண்ணே சீரியலின் ப்ரிவியூ வீடியோவை சன் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
அன்புவிடம் மழுப்பும் ஆனந்தி
அந்த வீடியோவில், அன்பு ஆனந்திக்காக காஃபி எடுத்துக் கொண்டு அவரது அறைக்கு வருகிறார். அப்போது, மிகவும் காலை நேரத்திலேயே ஆனந்தி வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அன்பு, ஆனந்தியிடம் எங்கே கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
ஆனந்தி மிக தயக்கத்துடன் வெளியில் எனக்கு ஒரு வேலை இருக்கிறது என பதில் கூறாமல் மழுப்பினார். இதைக் கேட்ட அன்பு, முன்பே சொல்லி இருந்தால் நானும் சீக்கிரம் கிளம்பி இருப்பேனே என கேட்கிறார். அப்போது இடைமறித்த ஆனந்தி, இல்லை நான் தனியாகவே போகிறேன் என திட்டவட்டமாக கூறுகிறார்.