அடேங்கப்பா என்னா நடிப்பு.. கம்பி கட்டுற கதை எல்லாம் விடுறியேம்மா.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
அன்பு வீட்டிற்கு முஸ்லீம் பெண்ணாக மாறி தீபாவளி கொண்டாட வரும் ஆனந்தி, அவரின் அம்மாவை நம்ப வைக்க சரளமாக பொய் சொல்லி நடிக்கிறார்.

வேலைக்காக ஹாஸ்டலில் தங்கி இருக்கும் ஆனந்திக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த துயரம் இருந்துகொண்டே இருந்தது. இதற்கிடையில், கடத்தல்காரர்களால் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி, அன்புவின் அம்மாவிற்கு தெரியாமல், அவரது வீட்டில் இருக்கிறார்.
பக்கா யோசனை தந்த யமுனா
இந்நிலையில், அன்பு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட நினைக்கும் ஆனந்திக்கு பக்கா யோசனை ஒன்றை தந்துள்ளார் அன்புவின் தங்கை யமுனா. இதையடுத்து, ஆனந்தி அன்புவிடம் இதுபற்றி எதுவும் சொல்லிக் கொள்ளாமல், புர்கா அணிந்து முஸ்லீம் பெண்ணாக அன்பு வீட்டிற்குள் நுழைகிறார். அங்கு அன்பு மற்றும் அவரது அம்மாவிடம் தன்னை யமுனாவின் தோழி என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
கோபமான அன்பு
இதை உண்மை என நம்பிய அன்பு, வீட்டில் ஆனந்தி இல்லாததால் கோபத்தில் இருக்கிறார். எங்கு போனார், எப்போது வருவார், அவரை அம்மா பார்த்தால் என்ன ஆகும் என்ற பதற்றத்தில், யமுனாவிடம் ஆனந்தியை திட்டிக் கொண்டிருக்கிறார்.