Singappenne Serial: வார்டன் லேடிக்கும் மகேஷிற்கும் என்ன பர்சனல்? திட்டம் போட்டு தூக்கும் ஆனந்தி
Singappenne Serial: மகேஷ், ஹாஸ்டல் வார்டனை சந்திப்பதற்காக வந்ததை மித்ரா, மகேஷின் அம்மாவிடம் கூறியதால் அவர்கள் இருவருக்கும் என்ன பர்சனல் இருக்கிறது என விவாதித்து வருகின்றனர்.

Singappenne Serial: ஆனந்தி தன்னை காதலிக்க மறுத்த நிலையில், வேறு யாரிடம் உதவி கேட்பது எனத் தெரியாமல் மகேஷ், ஹாஸ்டல் வார்டனை சந்தித்து அவர் காதலை கூறி அதை சேர்த்து வைக்க உதவுமாறும் கூறினார்.
ஷாக் ஆன மகேஷ் அம்மா
இதனால், இவர் அடிக்கடி ஹாஸ்டல் வார்டனை சந்திக்க வருகிறார். இதை பார்த்த மித்ரா, மகேஷிடம் கேள்வி கேட்க மகேஷ் அதற்கு கோவமாக பதில் கூறினான், நான் எதற்கு வந்தேன் என உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இது என்னோட பர்சனல் என கோவப்பட்டான்.
இதனால், சந்தேகமான மித்ரா, மகேஷின் நடவடிக்கைகள் குறித்து அவரது அம்மாவிடம் கூறினார். இதைக் கேட்டு ஷாக் ஆன மகேஷ் அம்மா, ஒரு வார்டன் லேடிக்கும் என் பையன் மகேஷிற்கும் என்ன பர்சனல் வேண்டி இருக்கு என மித்ராவிடம் கேள்வி எழுப்பினார். இவர்கள் இதுபற்றி ஏதும் தெரியாமல் மகேஷின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் அடைந்தனர்.
முழு மூச்சாக இறங்கிய அன்பு ஆனந்தி
இந்நிலையில், அன்புவின் அம்மாவிடம் செயின் பறித்துச் சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க அன்புவும் ஆனந்தியும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அன்புவும் ஆனந்தியும் அந்த பைக் டாக்ஸி டிரைவரின் உதவியுடன் அவர்களை தேடி வருகின்றனர். பின், ஆனந்தி செயின் திருடர்களை எப்படி பிடிக்கலாம் என ஆனந்தி திட்டம் தீட்டி வந்தார். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
மூர்க்கத்தனமான மகேஷ்
ஆனந்தியை உருகி உருகி காதலிக்கும் மகேஷ், ஆனந்திக்காக தன் அம்மா அப்பாவையே எடுத்து எறிந்து பேசும் நிலைக்கு சென்றுவிட்டான். அத்துடன் ஆனந்தி என் வாழ்க்கையில் இல்லை என்றால் என்னை உயிருடனே பார்க்க முடியாது என்றும் கூறி அனைவரையும் எச்சரித்து உள்னான்.
இதற்கிடையில், மகேஷ் ஆனந்தியிடம் காதலை சொல்லி அதை ஆனந்தி ஏற்க மறுத்ததால் மகேஷ் மூர்க்கத்தனமாக மாறினான். குடித்துவிட்டு ஆனந்தி தங்கி இருக்கும் ஹாஸ்டலில் வந்து தகராறு செய்தான். பின் அவனை அன்பு தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அழைத்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
வார்டன் தந்த நம்பிக்கை
பின் தன் தவறை உணர்ந்த மகேஷ், ஹாஸ்டல் வார்டனிடம் மன்னிப்பு கேட்டதுடன், தன் காதலுக்கு உதவுமாறும் கூறியுள்ளான். அப்போது, ஆனந்தியை நிச்சயம் உனக்கு திருமணம் செய்ய வைக்க உதவுவேன் என ஹாஸ்டல் வார்டனும் மகேஷிற்கு நம்பிக்கை தந்துள்ளார்.
மித்ராவின் சதி
ஹாஸ்டல் வார்டன் இப்படி கூறியதற்கு, மகேஷ் அவருடைய மகன் என புதிதாக ஒரு கதையை கூறி வந்கார். மேலும், அவர் நினைவாக உள்ள விளையாட்டு பொருட்களையும் வைத்து பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், ஹாஸ்டல் வார்டன் பாதுகாத்து வைத்திருந்த பொருளை மித்ரா திருடிவிட்டு ஆனந்தியை மாட்டிவிட நினைக்கிறாள்.
அசிங்கப்படுத்திய மகேஷ்
இந்த சமயத்தில் தான், மகேஷ் மீண்டும் ஹாஸ்டல் வார்டனை பார்க்க ஹாஸ்டலுக்கு வருகிறான். அப்போது, மகேஷை பார்த்து வேகமாக வந்த மித்ரா நீ ஹாஸ்டலில் என்ன பண்ற எனக் கேட்கிறாள். அப்போது, உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல என முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டார். இதனால் மித்ரா கோவமாக இருந்தார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்