Singapenne Serial: ஆனந்தியின் அழுகையால் துப்பு துலக்க தயாரான மித்ரா.. வெளிவருமா அன்பு ஆனந்தி காதல் கதை..
Singapenne Serial: மகேஷின் நிலைமையை பார்த்து ஆனந்தி கதிறி அழுவதை கண்ட மித்ரா, அழகன் குறித்து துப்பு துலக்க ஆரம்பித்துள்ளார்.

Singapenne Serial: ஆனந்தி மேல் தான் வைத்திருக்கும் காதலை நிரூபிப்பதற்காக மகேஷ் வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜ் ஒன்றில் தங்கி இருக்கிறார். இதை அறிந்து அன்புவும் ஆனந்தியும் வேதனைப்பட்டு வந்தனர். இந்நிலையில், லாட்ஜில் உள்ள மகேஷின் நிலையைக் கண்டு கண் கலங்கிய அன்பு, நம் காதலால் தான் இத்தனை கஷ்டம். நீ என்னை எதுக்கு தேடி வந்த என ஆனந்தியிடம் அழுதுகொண்டே கேட்கிறார்.
மித்ரா காதுக்கு சென்ற விஷயம்
அன்புவின் இந்தக் கேள்வியை தாங்கிக் கொள்ள முடியாத ஆனந்தி, கதறி அழுகிறாள். ஆனந்தி அழுவதை தூரத்தில் இருந்து பார்த்த மித்ரா, ஆனந்தி அருகில் வந்து அவள் என்ன பேசுகிராள் என கண்காணித்தார். அப்போது, ஆனந்தி, அவளுடைய அழகனை கண்டுபிடித்து விட்டதும், மகேஷின் காதலால் அவர்களுக்குள் பிரச்சனை வந்திருப்பதும் மித்ராவிற்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, மித்ரா ஆனந்தி, அழகன் பற்றி நிறைய விஷயங்களை கண்பிடிக்க உள்ளார்.
இதனால், அழகன் யார், அன்பு- ஆனந்தி காதல் என்ன ஆகும், மகேஷ் மித்ராவை ஏற்றுக் கொள்வாரா என்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்க உள்ளது.
கோவத்தில் மகேஷ் அப்பா
இதற்கிடையில், தன் மகன், வீட்டை விட்டு வெளியேறியதைக் கூட தெரிந்து கொளஅளாமல் இருக்கிறார் மகேஷ் அம்மா, இதனால் கோவமடைந்த மகேஷின் அப்பா, மகேஷ் மனம் வருந்தியது, வீட்டை விட்டு வெளியேறியது, ஹாஸ்டல் வார்டனிடம் பேசியது என அனைத்தையும் கூறினார். அத்துடழ், உன்னுடைய முன்கோவம் தான் மகேஷை வீட்டை விட்டு வெளியேற்றியது என கோவமாக பேசியிருக்கிறார்.
மகேஷின் வேலையால் வருந்தும் ஆனந்தி
முன்னதாக ஆனந்திக்கு தன் காதலை புரிய வைக்க பணக்கார மகேஷாக இல்லாமல் சாதாரண மனிதனாக மாறப் போகிறேன். என் காதலை நிச்சயம் புரிய வைப்பேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் தங்கி உள்ளார். இதை எல்லாம் அறிந்து அன்புவும் ஆனந்தியும் தவித்து வந்தனர்.
வார்டன் உதவியை நாடிய மகேஷ் அப்பா
இந்நிலையில், மகேஷின் இந்த முடிவை மாற்ற மகேஷின் அப்பா பல முயற்சி எடுத்தும் அது வீணாகிப் போனது. இந்த நிலையில் மகேஷை எப்படியாவது வீட்டிற்கு திரும்ப வர வைக்க வேண்டும் என நினைத்து அவரது அப்பா, ஹாஸ்டல் வார்டனிடம் உதவி கேட்டுள்ளார். மகேஷ் உங்களது பேச்சைத் தவிர வேறு யார் பேச்சையும் கேட்காமல் இருக்கிறார். அதனால், அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டிற்கு வர வைக்குமாறு வார்டனுக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார்.
ஆனந்தி மனதை மாற்றும் வார்டன்
அதே சமயம், ஆனந்தியும் மகேஷின் நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டார். அதற்காக அவர் ஹாஸ்டல் வார்டனிடம் வந்து மகேஷ் சாரிடம் எப்படியாவது பேசி சமாதானம் படுத்துங்கள் என கெஞ்சிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட ஹாஸ்டல் வார்டன், மகேஷை உன்னை மறக்க வைக்க நினைப்பதற்கு பதிலாக நீ அவன் மேல் ஆசைப்படுவது பற்றி யோசி எனக் கூறி குண்டைத் தூக்கி போட்டுள்ளார். இதைக் கேட்ட ஆனந்தி, செய்வது அறியாது முழித்துக் கொண்டிருந்தார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்