Singapenne Serial: ஆனந்தி இயத்தில் ஈட்டியை இறக்கிய மகேஷ் அம்மா.. தவிக்கும் அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
Singapenne Serial: ஆனந்தி தான் தன் வீட்டு மருமகள் என கார்மெண்ட்சில் வேலை செய்வோரிடம் மகேஷ் அம்மா சொன்னதைக் கேட்டு கதறி நியாயம் கேட்கிறார் ஆனந்தி.

Singapenne Serial: ஆனந்தியை உருகி உருகி காதலிக்கும் மகேஷ், தன் காதலை ஆனந்தியிடம் கூறியும் அவள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு நில்லாமல், அது மகேஷின் பெற்றோருக்கும் கௌரவக் குறைச்சலாகவே பட்டது. இதனால், ஆனந்திக்கும் தன் குடும்பத்திற்கும் தன் காதலின் ஆழத்தை புரிந்து கொள்ள வைக்கும் நோக்கத்தில் வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் தங்கியிருந்தார் மகேஷ்.
மகேஷ் அம்மாவின் பயம்
இதனால், ஆதங்கம் தாங்காத மகேஷின் அம்மா, தன் மகனின் வாழ்க்கையில் இருந்து ஆனந்தி விலகுவாளா என் மகன் தான் சொன்னதை எல்லாம் கேட்டு நடப்பானா என குறி கேட்க கோயிலுக்கு வருகிறார். அப்போது அவர் மித்ராவையும் கோயிலுக்கு வர சொல்கிறார். அந்த சமயத்தில், கோயிலில் உள்ள சாமியார், மகேஷ் வாழ்க்கையை விட்டு அவ்வளவு எளிதில் ஆனந்தியை விரட்ட முடியாது என சொன்னதும் மகேஷ் அம்மாவிற்கு பயம் அதிகமானது.
அழகனை கண்டுபிடிக்க துடிக்கும் மித்ரா
அப்போது தான், ஆனந்தி அழகனை கண்டுபிடித்து விட்டதாகவும், அவள் தொடர்ந்து அழகனுடன் பேசிக் கொண்டிருப்பதும் தனக்கு தெரிய வந்ததாகவும், அதை ஆனந்தியின் நண்பர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டதாகவும் மித்ரா கூறினாள்.
மேலும், அழகன் யார் என்பதை மட்டும் கண்டுபிடித்தால் எல்லா பிரச்சனையும் முடிந்தது என மித்ரா சொல்லிக் கொண்டிருக்கையில், மகேஷின் அம்மா கண்ணில் அன்புவும் ஆனந்தியும் தென்பட்டனர்.
கையும் களவுமாக சிக்கிய ஆனந்தி
அவர்கள் இருவரும் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்ததையும், அழுது கொண்டிருக்கும் ஆனந்தியை அன்பு சமாதானம் செய்வதையும் பார்த்த மித்ராவும் மகேஷ் அம்மாவும் அன்பு தான் அழகன் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, மகேஷின் அம்மா தன் பையனை ஆனந்தியிடமும் ஹாஸ்டல் வார்டனிடமும் இருந்து காப்பாற்ற சூப்பர் திட்டம் போட்டு கார்மெண்ட்சிற்கு வருகிறார்.
ஆனந்தியை மருமகளாக ஏற்ற மகேஷ் அம்மா
அப்போது, தன் கம்பெனியில் வேலை செய்யும் அனைவரையும் அழைத்து, ஆனந்தி தாந் தன் வீட்டு மருமகள் என அறிவிக்க, குழப்பத்தில் மித்ரா, அன்பு, ஆனந்தி இருக்கின்றனர்.
இதை சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆனந்தி, எப்படி என்னைக் கேட்காமல் இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம் என வாதாடும் போது, ஏற்கனேவே, உன் வீட்டிற்கு சென்று உன் அப்பா அம்மாவிடம் பெண் கேட்டு வந்தாச்சு என சொல்கிறார் மகேஷ் அம்மா. இதனால், என்ன செய்வது எனத் தெரியாமல் ஆனந்தியும் அன்புவும் கலங்கி நிற்கின்றனர். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
ஆதங்கத்தை கொட்டிய மகேஷ்
முன்னதாக, நான் ஆனந்தியை காதலித்தது அம்மாவுக்கு ஸ்டேட்டஸ் பிரச்சனை, நான் லாட்ஜில் இருப்பது உங்களோட ஸ்டேட்டஸ் பிரச்சனை. அப்போ எனக்காக எப்போ யோசிப்பீங்க. உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் ஆனந்திய லவ் பண்றேன்னு சொன்னேன். ஆனா எனக்காக நீங்க என்ன பண்ணீங்க. ஆனா, இதையே நான் அன்புகிட்டயும் வார்டன் கிட்டயும் சொல்லும் போது அவங்க எனக்காக துணையா இப்போ வரைக்கும் நிக்குறாங்க. அதனால இனிமே நீங்க என்னோட குடும்பம் இல்ல. இவங்க ரெண்டு பேர் தான் என்னோட குடும்பம்" என பேசி மகேஷ் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்