பறந்த உத்தரவு, பணிந்த சிங்கமுத்து.. வடிவேலு பற்றி பேசமாட்டேன்.. அவதூறும் பரப்ப மாட்டேன்! நீதிமன்றத்தில் உத்தரவாதம்
வடிவேலு பற்றி பேசமாட்டேன், அவதூறும் பரப்ப மாட்டேன் என நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணிந்த நடிகர் சிங்கமுத்து மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி காம்போவாக வடிவேலு - சிங்கமுத்து இருந்த வருகிறார்கள். இதையடுத்து நிலம் தொடர்பாக ஏற்பட்ட சரச்சையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில், பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து அவதூறு கருத்துகளை பேசி வந்தார்.
வடிவேலு தரப்பில் வழக்கு
இதைத்தொடர்ந்து நடிகர் சிங்கமுத்து, யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். இதற்காக ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாகப் பேசத் தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.