வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 25 வயதாகும் இன்ஸ்டா பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
இன்ஸ்டா பிரபலமும், ஆர்ஜேவுமான சிம்ரன் சிங் தனது அப்பார்மெண்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது இறப்புக்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாவில் பிரபலமான இன்ப்ளூயன்ஸரும், ஆர்ஜேவுமான 25 வயதாகும் சிம்ரன் சிங், குருக்கிராமில் உள்ள தனது அப்பார்மெண்டில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சிம்ரன் சிங் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சிம்ரன் சிங்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமாக இருந்து வரும் சிம்ரன் சிங் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பலோயர்களை கொண்டுள்ளார். கடைசியாக டிசம்பர் 13ஆம் தேதி இன்ஸ்டாவில் தனது ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதையடுத்து சிம்ரன் சிங் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
ஜம்முவின் இதயத்துடிப்பு என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்ரன் சிங், பகுதி நேர ஆர்ஜேவாகவும் இருந்து வந்துள்ளார். அத்துடன் வேடிக்கையான ரீல்ஸ்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ள சிம்ரன் சிங், தனது இனிமையான குரலின் மூலம் பலரையும் ஈரக்ககூடியவராக இருந்துள்ளார்.
சிம்ரன் சிங் கடைசி இன்ஸ்டா பதிவு
தனது கடைசி இன்ஸ்டா பதிவில் கடற்கரை பின்னணியில் லாங் கவுன் அணிந்து க்யூட்டாக டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விடியோவை பகிர்ந்து, "கடற்கரைக்கு மேல் முடிவில்லா சிரிப்பு மற்றும் அவளது கவுன் அணிந்த பெண்" என கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு லைக்குகளை குவித்த ரசிகர்கள் அவரது அழகை புகழ் பாட கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் இரங்கல்
சிம்ரன் சிங் இறப்புக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சரான டாக்டர். ஃபரூக் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஃபரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் எக்ஸ் பக்கத்தில், "JKNC இன் தலைவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணை முதல்வர் @Surinderch55 உடன் துணைத் தலைவர் மற்றும் முதல்வர் @OmarAbdullah ஆகியோர் RJ சிம்ரன், 'ஜம்முவின் இதயம்' என்று அன்புடன் அழைக்கப்படும் சிம்ரன் சிங்கின் துயரமான மற்றும் அகால மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இந்த கடினமான நேரத்தில் சிம்ரனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு டாக்டர். ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கின்றனர். அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், நினைத்துப் பார்க்க முடியாத இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை அவரது அன்புக்குரியவர்களுக்கு வழங்கவும் பிரத்திப்பதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
டாபிக்ஸ்