Simran: வாலி படத்தின் அந்த காட்சி..! எஸ்.ஜே. சூர்யா செய்தததை மறக்க முடியாது - சிம்ரன் புகழாரம்
வாலி படத்தில் இடம்பிடித்திருக்கும் முக்கிய காட்சி ஒன்றை பகிர்ந்திருக்கும் நடிகை சிம்ரன், இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அஜித்குமார் இட்டை வேடங்களில் நடித்து எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வாலி திரைப்படம் வெளியாகி பிப்ரவரி 23ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை கொண்டாடும் விதமாக படத்தையும் ரீ-ரிலீஸ் செய்தார்கள்.
இதையடுத்து படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சி ஒன்றை பகிர்ந்திருக்கும் சிம்ரன், "அட கடவுளே. இந்த காட்சியை மறக்க முடியாது. எஸ்.ஜே. சூர்யா விளக்கிய விதம், அவர் இயல்பிலேயே எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதை நினைத்து பார்க்க வைக்கிற மறக்க முடியாத சம்பவம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிம்ரனின் பதிவுக்கு பதில் அளித்த எஸ்.ஜே. சூர்யா, "நான் எனது வேலையை மட்டும்தான் செய்தேன். நீங்களும், அஜித் சாரும் அதை செயல்படுத்திய விதத்தை ரசித்து, இப்போதும் புதிய படம் போல் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.