ஷூட்டிங்கை நிறுத்துங்கப்பா..கமல் போட்ட உத்தரவு? சிம்பு ரசிகர்கள் கோபம்! சிம்பு 48 படப்பிடிப்பில் நடந்தது என்ன?
சிம்பு படத்தை தயாரிப்பதாக இருந்த உலகநாயகன் கமல்ஹாசன், திடீரென அந்த படத்தில் இருந்து விலகியுள்ளாராம். இதற்கான காரணமும் தெரியவில்லை என கூறப்படும் நிலையில், அவர் மீது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாமல் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தனது படங்களை மட்டுமல்லாமல் பிற ஹீரோக்களின் படங்களையும் தயாரித்து வருகிறார்.
இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்திருக்கும் அமரன் படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸாக வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து மேஜர் முகுந்த் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
சிம்பு படத்திலிருந்து கமல் விலகல்
அமரன் படம் உருவாகும்போதே சிம்புவை வைத்து புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். சிம்புவின் 48வது படமாக இது சிம்பு 48 என்று அழைக்கப்பட்ட நிலையில், படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்கள் நடைபெற்று முடிந்திருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தின் தயாரிப்பில் இருந்து கமல்ஹாசன் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.