Sikandar : ‘அப்பா… கட்டப்பா..’ அறிமுகம் செய்த சல்மான் கான்.. நெகிழ்ந்து போன சத்யராஜ்!
பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ், சல்மான் கானின் 'சிகந்தர்' படத்தில் வில்லனாக நடிக்கிறார். சல்மானை விட சலீம் கானை சந்தித்ததில் அவருக்கு அதிக மகிழ்ச்சி என்று, அவர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிக்கும் 'சிகந்தர்' படத்தின் டிரைலர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. பாகுபலியின் கட்டப்பா என அறியப்படும் சத்யராஜ் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். டிரைலர் வெளியீட்டு விழாவில், சல்மான் கானுடன் நடிப்பதை விட சலீம் கானை சந்தித்தது தனக்கு மிகவும் உற்சாகமாக இருந்ததாக சத்யராஜ் கூறினார். மூத்த ஸ்கிரிப்ட் ரைட்டர் சலீம் கானை சந்திக்க எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
சல்மான் கான் எப்படி அறிமுகப்படுத்தினார்?
டிரைலர் வெளியீட்டு விழாவில், ‘சலீம் சாரை சந்தித்ததுதான் இன்று எனக்கு நடந்த மிகச் சிறந்த விஷயம். சாப் (சல்மான்) என்னை அறிமுகப்படுத்தினார், ’அப்பா.. கட்டப்பா'ன்னு என்னை அறிமுகப்படுத்தினார். கல்லூரியில் படிக்கும் போதே சலீம்-ஜாவேத் சாஹப் எத்தனையோ நடிகர்களின் வாழ்க்கையை தங்கள் ஸ்கிரிப்ட் மூலம் உயர்த்தியிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அதனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு' என்று சத்யராஜ் கூறினார். 'சிகந்தர்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நன்றி என்று சத்யராஜ் கூறினார்.
சல்மானை விட சலீமை சந்தித்ததில் அதிக மகிழ்ச்சி
பாகுபலி மற்றும் பாகுபலி-2 படங்களில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ், 'சல்மான் சாரை சந்தித்ததை விட சலீம் சாரை சந்தித்தது எனக்கு பெரிய வாய்ப்பு. 47 வருஷமா இந்தத் துறையில் இருக்கேன், 258 படங்கள் நடிச்சிருக்கேன். காமெடி வில்லனாத்தான் என்னோட கெரியர் ஆரம்பிச்சது. பிறகு ஹீரோ ஆனேன், 100 படங்கள் நடிச்சிருக்கேன்' என்றார். முருகதாஸ் சார் மீண்டும் என்னை காமெடி வில்லனா நடிக்க வைச்சிருக்கார் என்று சொன்னார்.
ஷர்மன் ஜோஷி மற்றும் காஜல் அகர்வால் என்ன சொன்னாங்க?
முன்னாடி நான் இது மாதிரி கேரக்டர்ல நடிச்சப்போ அது ஒரு ட்ரெண்ட் செட்டரா மாறிடுச்சு. இப்பவும் இது மாதிரி நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சத்யராஜ் கூறினார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காஜல் அகர்வால், 'இவ்வளவு பெரிய படத்துல, இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட்டோட நடிக்கிறது ரொம்ப பெரிய விஷயம். எத்தனை படம் நடிச்சிருக்கோம்ன்னு விஷயம் இல்ல, எப்பவும் உற்சாகமாத்தான் இருக்கும்'ன்னு சொன்னார். ஷர்மன் ஜோஷி, சல்மான் பத்தி கேள்விப்பட்டதை எல்லாம் படப்பிடிப்புல உணர்ந்தேன் என்று அவர் கூறினார்.
