Sidhu Shreya: ஆரம்பமாகும் வள்ளியின் வேலன் சீரியல்.. திருவண்ணாமலை கோயிலில் சித்து, ஸ்ரேயா
Sidhu Shreya: மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைய வேண்டும் என்று சித்து மற்றும் ஷ்ரேயா இருவரும் ஜோடியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Sidhu Shreya: ஆரம்பமாகும் வள்ளியின் வேலன் சீரியல்.. திருவண்ணாமலை கோயிலில் சித்து, ஸ்ரேயா
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு ஷ்ரேயா ரஜினி என்ற சீரியலில் நடிக்க சித்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார். இந்த இரண்டு சீரியல்களும் முடிவுக்கு வந்து விட்டதை தொடர்ந்து தற்போதும் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.
ஆமாம், ஜீ தமிழில் வரும் திங்கள் ( செப்டம்பர் 2 ) தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள வள்ளியின் வேலன் என்ற தொடரில் ஜோடி சேர உள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.