Sibi Sathyaraj: 'குடும்பஸ்தன் கதைய மிஸ் பண்ணிட்டேன்.. மணிகண்டன் பண்ணத யாருமே’ - சத்யராஜின் மகன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sibi Sathyaraj: 'குடும்பஸ்தன் கதைய மிஸ் பண்ணிட்டேன்.. மணிகண்டன் பண்ணத யாருமே’ - சத்யராஜின் மகன் பேட்டி!

Sibi Sathyaraj: 'குடும்பஸ்தன் கதைய மிஸ் பண்ணிட்டேன்.. மணிகண்டன் பண்ணத யாருமே’ - சத்யராஜின் மகன் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 13, 2025 05:55 PM IST

Sibi Sathyaraj: தொகுப்பாளர் முழுக்க, முழுக்க கோயம்புத்தூர் பாஷையில் காமெடி கலந்து எப்போது படம் நடிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு சிபி சத்யராஜ் அளித்த பதில் இங்கே

Sibi Sathyaraj: குடும்பஸ்தன் கதைய மிஸ் பண்ணிட்டேன்.. ‘மணிகண்டன் பண்ணத யாருமே’ - சத்யராஜின் மகன் பேட்டி!
Sibi Sathyaraj: குடும்பஸ்தன் கதைய மிஸ் பண்ணிட்டேன்.. ‘மணிகண்டன் பண்ணத யாருமே’ - சத்யராஜின் மகன் பேட்டி!

கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்தார். இப்படம் வருகிற ஏப்ரல் 18 ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் தொடர்பான புரோமோஷனில், சினிமா விகடனுக்கு பேட்டியளித்த நடிகர் சிபி மணிகண்டன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற குடும்பஸ்தன் திரைப்படத்தை மிஸ் செய்த கதையை பகிர்ந்தார். அந்தப்பேட்டியில் தொகுப்பாளர் முழுக்க, முழுக்க கோயம்புத்தூர் பாஷையில் காமெடி கலந்து எப்போது படம் நடிப்பீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சிபி ‘சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படத்தின் கதையை எனக்கு முன்னமே தெரியும். அந்தப்படத்தின் கதை எனக்கும் வந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியாமல் சென்று விட்டது.

அந்தப்படத்தை பார்க்கும் போது கோயம்புத்தூர் பாஷை என்பதைத்தாண்டி, அந்த கதைக்கு மணிகண்டன் கொடுத்த நியாயமான நடிப்பை வேறு யாரும் கொடுத்திருக்க முடியாது. அந்தப்படக்குழுவிற்கு என்னுடைய பாராட்டுகள். அந்தப்படத்தை பார்த்து முடித்த போது, எனக்கு கோயம்புத்தூருக்கே சென்று வந்தது போல இருந்தது’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.