'ஸ்ரேயா கோஷல் என் தெய்வம்.. ஜானகி அம்மா வாய்ஸில் மட்டும் எக்ஸ்பிரசன் செய்வாங்க’: பாடகிகள் பற்றி சிவாங்கி பேட்டி!
சினிமாவில் தற்போது சிவாங்கி கிருஷ்ணகுமார் நடிப்பு மற்றும் பாடல் திறமைமூலம் படிப்படியாக இன்றைய இளம் தலைமுறையை ஈர்த்துவருகிறார். அவரது பேட்டியைக் காணலாம்.

சிவாங்கி கிருஷ்ணகுமார் விஜய் டிவியில் 2020ஆம் ஆண்டு நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதின் மூலம் பிரபலமான நபராக மாறினார். முன்னதாக, அவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 7 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்தார். சினிமாவில் தற்போது இவர் நடிப்பு மற்றும் பாடல் திறமைமூலம் படிப்படியாக இன்றைய இளம் தலைமுறையை ஈர்த்துவருகிறார்.
இத்தகைய சிவாங்கி 2025ஆம் ஆண்டு, மார்ச் 11ஆம் தேதி, கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு:
‘’நாம் ரசித்த பாடகிகளின் லிஸ்ட் சொல்றேன். அவங்க பாடல்களில் பிடித்த பாடல் ஒன்று?நீங்கள் சொல்லணும். முதலில் பின்னணிப் பாடகி பி.சுசிலா அம்மா பற்றி சொல்லுங்க?
சுசிலா அம்மா பாடுறது வந்து, ரொம்பக் கஷ்டப்படாமல் மயிலிறகை வைக்கிற மாதிரி ஒரு சிங்கர். நான் சொல்றதுக்கு எனக்கு அருகதை இல்லை. அவங்க பாடுனதில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ ஞாபகம் தொல்லையோ’ பாடல் ரொம்பப் பிடிக்கும்.
பாடகி ஜானகி அம்மா பற்றி சொல்லுங்க?
ஜானகி அம்மா, எப்போதும் பான் இந்தியா சிங்கர். ஒரு மூடு பாடுனா, அப்படி பாடுவாங்க. நாம் மேடையில் அவங்க பாடுறதைப் பார்த்த ஒரே மாதிரி இருக்கும். கையில் ஒரு புக்கை வைச்சிட்டு அதை மட்டும் பார்த்திட்டுப் பாடுவாங்க. நாமெல்லாம் அவ்வளவு எக்ஸ்பிரசனோடு பாடுவோம். ஜானகி அம்மா, வாய்ஸில் மட்டும் எக்ஸ்பிரசன் வரும். அந்த ஃபீலே தனி. ஜானகி அம்மா பாடியதில், ’ஏதோ சுகம் உள்ளுருது.. ஏதோ மனம் தள்ளாடுது.. விரல்கள் தொடவா.. விருந்தைப் பெறவா.. மார்போடு கண்கள் மூடவா.. மலரே மவுனமா.. மவுனமே வேதமா' பாடல் பிடிக்கும்.
பின்னணிப் பாடகி சித்ரா அம்மா பற்றி சொல்லுங்க?
சமீபத்தில் மலையாளத்தில் ஒரு ஷோ பண்ணுனேன். சித்ரா அம்மா பாடுனதைத் தான் பாடினேன். லைவ்வாக கேட்டாலுமே ரொம்ப பெர்ஃபெக்ட்டாகப் பாடுவாங்க. அவங்களுக்கு கொஞ்சம் ஸ்ருதி போனால்கூட, ஒரு மாதிரி அப்செட் ஆகிடும். சித்ரா அம்மா பாடுனதில் எனக்குப் பிடிச்ச பாட்டு ’கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை’ பாடல் பிடிக்கும்.
பாடகி ஸ்ரேயா கோஷல் பற்றி சொல்லுங்க?
அடப்போங்க. அவங்க என் தெய்வம். இதுக்கு மேல் அவங்களை என்னால் சொல்லமுடியாது. கலாட்டா ஊடகத்துக்கு ஸ்ரேயா கோஷலிடம் சமீபத்தில் பேட்டி எடுத்தேன். சமீபமாக அவங்க கூட கான்செர்ட்டுக்குப் போனேன். சில பாடல்கள் அவங்க பாடிய பாடல் பாடும்போது அழுதிட்டேன். அவங்க பாடும்போது எப்போதும் அவங்க முகத்தில் இன்னசென்ஸ் இருந்துக்கிட்டே இருக்கும். அவங்களுக்கு நான் பாடுறேன் என்கிற சந்தோஷம் முகத்தில் இருக்கும். ஒவ்வொரு தடவை பாடும்போதும் முதல் தடவைப் பாடுவதுபோலே பாடுவாங்க. அது அவங்க வாய்ஸிலும் தெரியுது. அவங்க அணுகுமுறையிலும் தெரியுது.
அவங்க தான் என் தெய்வம். அவங்களுக்காக எப்போது வேண்டுமென்றாலும் நிற்பேன். அவங்க பாடியதில் ’சண்டியரே சண்டியரே கண்ணும் படும் உங்கமேல.. ஒண்டியில நிற்கிறேனே கண்டுகொள்ளுங்க.. ஊர் ஒரு மாதிரி தான் உன்னை என்னை பார்க்குதய்யா.. கண்ணு காது மூக்கு வைச்சு கண்டபடி பேசுதய்யா.. கவலையில்லை.. காத்தில விடு.. பதிலைச் சொல்லு’ என்ற ஸ்ரேயா கோஷலின் பாட்டு ரொம்பப் பிடிக்கும்’ எனப் பாடினார், சிவாங்கி.
நன்றி: கலாட்டா தமிழ் யூடியூப் சேனல்

தொடர்புடையை செய்திகள்