Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’: நாடு திரும்பிய சிவராஜ்குமார் பேட்டி
Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’ என புற்றுநோயில் இருந்து மீண்டு நாடு திரும்பிய சிவண்ணா பேட்டியளித்துள்ளார்.

Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’: நாடு திரும்பிய சிவண்ணா பேட்டி (social media)
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கர்நாடாகவின் உச்ச நடிகர் சிவராஜ்குமார் என்ற சிவண்ணா, அறுவை சிகிச்சைக்குப் பின் தாயகம் திரும்பினார்.
சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவராஜ்குமார், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மூத்த மகன் ஆவார். இவரது கடைசி சகோதரன் தான், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் ஆவார்.
இந்நிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார், குடியரசு தினத்தன்று கர்நாடகாவுக்கு திரும்பிய செய்தியைக் கேட்டதும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் பெங்களூரு விமான நிலையத்தின் டோல்கேட் முன்பு திரண்டனர்.