‘11 லிட்டர் ரத்தத்தில் சிலை.. சிலுவையில் அறைந்து வேண்டுதல்..’ தீவிர ஜெ., பக்தர் ஷிஹான் ஹுசைனியின் அதிர்ச்சி சம்பவங்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘11 லிட்டர் ரத்தத்தில் சிலை.. சிலுவையில் அறைந்து வேண்டுதல்..’ தீவிர ஜெ., பக்தர் ஷிஹான் ஹுசைனியின் அதிர்ச்சி சம்பவங்கள்!

‘11 லிட்டர் ரத்தத்தில் சிலை.. சிலுவையில் அறைந்து வேண்டுதல்..’ தீவிர ஜெ., பக்தர் ஷிஹான் ஹுசைனியின் அதிர்ச்சி சம்பவங்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 25, 2025 09:08 AM IST

பல நேரங்களில் அவரின் செயலை ஜெயலலிதா விரும்பவில்லை. இருப்பினும் ஷிஹான் ஹுசைனி தன் செயல்களை தொடர்ந்தார். அவரை எச்சரித்தும் கூட, அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அப்படி என்ன செய்தார் ஷிஹான் ஹுசைனி?

‘11 லிட்டர் ரத்தத்தில் சிலை.. சிலுவையில் அறைந்து வேண்டுதல்..’ தீவிர ஜெ., பக்தர் ஷிஹான் ஹுசைனியின் அதிர்ச்சி சம்பவங்கள்!
‘11 லிட்டர் ரத்தத்தில் சிலை.. சிலுவையில் அறைந்து வேண்டுதல்..’ தீவிர ஜெ., பக்தர் ஷிஹான் ஹுசைனியின் அதிர்ச்சி சம்பவங்கள்! (reddit)

ஷிஹான் ஹுசைனி செய்த சம்பவங்களில் சில

  • நடுரோட்டில் தன்னுடைய கையில் நூற்றியொரு கார்களை ஏற்றி, அந்த நசுங்கிய கையில் வடிந்த ரத்தத்தின் மூலம் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வரைந்தார்.
  • மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 350 மிலி ரத்தம் என எட்டு வருடங்களுக்கு தன்னுடைய உடம்பில் இருந்து ரத்தத்தை சேகரித்து 11.2 லிட்டர் ரத்தத்தால் ஜெயலலிதாவின் உருவச் சிலையை செய்தார்.
  • தன் ரத்தத்தை மட்டுமல்லாது தன்னிடம் பயிலும் மாணவர்களிடம் இருந்தும் ரத்தத்தை கட்டாயப்படுத்தி பெற்று சிலை வடித்ததாக புகார் ஆனது
  • ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றபோது, அவர் சிறையில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து பிரார்த்தனை செய்தார்.
  • ஜெயலலிதா குறித்து இலங்கை அரசு இணையதளத்தில் தவறாகச் செய்தி வெளியிட்டதை எதிர்த்து அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் உருவத்தை பன்றியின் ரத்தத்தால் வரைந்து அதன் கீழ் ராஜபிக்‌ஷே என்று எழுதினார்

மேலும் படிக்க | Shihan Hussaini: ரத்த புற்றுநோய்.. உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்த ஹூசைனி! விஜய், பவன் கல்யாணை பார்க்க விருப்பம்

அன்றும் இன்றும் ஜெயலலிதாவின் பக்தன்

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது மட்டுமல்லாமது, அவர் இறந்த பிறகும் அவரது நினைவாக, மக்கள் முன்னேற்ற அமைப்பு(AMMA) என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் மூலம் தன் ஜெயலலிதா விசுவாசத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கருத்துக்கள், பேச்சுகள், செய்கைகளால் பேசப்பட்ட ஷிஹான் ஹுசைனி, இன்று மூச்சை நிறுத்தியுள்ளார். அவர் ஒரு திறமையான தற்காப்பு கலைஞர். ஆனால், புற்றுநோயிலிருந்து அவரால் தற்காத்துக் கொள்ள முடியாமல் போனது தான் வேதனையான விசயம்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.