Shankar on Arrahman: ‘கேட்டு அப்படியே மிரண்டுட்டேன்..’ - சிக்கு புக்கு ரயிலே உருவான விதம் - ஷங்கர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shankar On Arrahman: ‘கேட்டு அப்படியே மிரண்டுட்டேன்..’ - சிக்கு புக்கு ரயிலே உருவான விதம் - ஷங்கர்

Shankar on Arrahman: ‘கேட்டு அப்படியே மிரண்டுட்டேன்..’ - சிக்கு புக்கு ரயிலே உருவான விதம் - ஷங்கர்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 15, 2024 09:20 AM IST

Shankar on Arrahman:நீங்கள் அந்தப் படத்தில் பார்த்தீர்கள் என்றால். ஐஸ் சவுண்டெல்லாம் அப்படியே கேட்கும். பேஸ் எல்லாம் ஜாரிங்கில்லாமல் இருக்கும். - ஷங்கர்

Shankar on Arrahman: ‘கேட்டு அப்படியே மிரண்டுட்டேன்..’ - சிக்கு புக்கு ரயிலே உருவான விதம் - ஷங்கர்
Shankar on Arrahman: ‘கேட்டு அப்படியே மிரண்டுட்டேன்..’ - சிக்கு புக்கு ரயிலே உருவான விதம் - ஷங்கர்

அப்படி ஒரு சவுண்ட் குவாலிட்டி

இப்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் வசதி எல்லாம் அப்போது கிடையாது. எல்லாமே ஃபிலிம்மில் தான் ரெக்கார்ட் ஆகும். அதில் ஸ்டீரியோ வடிவிலான இசையை  கொண்டு வருவதே அவ்வளவு கடினமான ஒன்று. ஆனால் ரஹ்மான் அதிலேயே அப்படியான ஒரு சவுண்ட் குவாலிட்டியை அந்த படத்தில் கொண்டு வந்திருந்தார். நீங்கள் அந்தப் படத்தில் பார்த்தீர்கள் என்றால். ஐஸ் சவுண்டெல்லாம் அப்படியே கேட்கும். பேஸ் எல்லாம் ஜாரிங்கில்லாமல் இருக்கும்.  வெள்ளை மழை பாட்டில், அப்படி ஒரு சவுண்ட் இருக்கும்.  அந்த சவுண்டுக்கு உண்மையில் கண்ணாடி எல்லாம் நொறுங்கிவிடும். ஆனால், அது அனைத்தும் ஜாரிங்கில்லாமல் அவ்வளவு தெளிவாக கேட்டது.  சவுண்டே மிகவும் புதுமையாக இருந்தது. 

உதயம் தியேட்டரில் அந்த படத்தை பார்த்துவிட்டு, இடைவேளையில் வெளியே வந்த போது,  அந்த இசை அப்படியே என் மனதிற்குள் நின்றது. அப்போதுதான் நாம் பணியாற்றினால், இவருடன் தான் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏ ஆர் ரஹ்மான் டெக்னிக்கலாக மிக மிக ஸ்ட்ராங். எந்தெந்த தியேட்டரில், எப்படி சவுண்ட் கேட்கும் என்பதை மிகச் சரியாகக் கணித்து, சினிமாவை புரிந்து கொண்டவர். இசையை ஆப்டிக்கலாக கன்வர்ட் செய்யும் பொழுது, அதனுடைய மேஜிக் போகாமல் எப்படி அதை கொண்டு வர வேண்டும் என்பதெல்லாம் ஏ ஆர் ரஹ்மானுக்கு மிக மிக நன்றாக தெரியும். 

Let's check Vibe 

சூரியன் படத்தில் இடம்பெற்ற லாலாக்கு டோல் டப்பிமா பாடலுக்கு நான் அவருடன் பணியாற்றினேன்.  படத்தின் இயக்குநர் அந்த பாடலின் முழு பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்து இருந்தார். அந்த பாடலுக்காக நான் நிறைய மெனக்கிட்டேன். மரம் வெட்ட கூடிய இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்தேன். அதுமட்டுமல்லாமல் சென்ட்ரல் ஜெயிலுக்கு சென்று அங்கு நன்றாக கானா பாடுபவர்களை ஆடிஷன் செய்து ரெக்கார்ட் செய்து எடுத்து வந்தேன். வடசென்னைக்கு சென்று நன்றாக கானா பாடுபவர்களை நவீன் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு அழைத்து வந்து, ஆடிஷன் செய்து அதில் ஷார்ட்லிஸ்ட் ஆனவர்களை அந்த பாடலில் பயன்படுத்தினோம். அப்போது ஏ ஆர் ரஹ்மானுக்கு என் மீது, இந்த இயக்குநர் இசைக்காக நன்றாக மெனக்கிடுவார் போல என்று நினைத்து இருக்கிறார். 

இதையடுத்து நான் அவரிடம் சென்று என்னுடைய படத்தில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டேன். இரண்டு பேருமே சென்னையில் வளர்ந்தவர்கள். அது மட்டுமல்லாமல் ஒரே வயது வேறு. இதனால் எங்களுக்குள் ஒரு நல்ல உறவு உண்டானது. முதலில் அவரை சந்திக்கும் பொழுது, அவர் இசையமைப்பதற்கான வேலையை உடனே தொடங்கவில்லை. நாம் முதலில் இரண்டு நாட்கள் சும்மா பேசுவோம் என்று சொல்லி let's check vibe என்றார். 

இதையடுத்து, சிக்கு புக்கு ரயில் பாடலுக்கான  சிச்சு வேஷனை அவரிடம் விளக்கினேன். அந்த பாடலை, கானா பாடலாக நானே பாடி காண்பித்து, அதனை ட்ரெயினில் பாடும் வகையில், ரிதம் போட்டு இசை அமைத்துக் கொடுங்கள் என்று கேட்டேன். இரண்டாவது நாளோ, மூன்றாவது நாளோ அவர் என்னை அழைத்தார். நான் ரயில் போன்ற ரிதம் வேண்டும் என்று கேட்டதால், அவர் அப்படியான  ஒரு ரிதமை அமைத்து, அதில் ஒரு பீசை எனக்கு போட்டு காட்டினார்.    அப்போது, அவரது ஸ்டுடியோ மிக மிக சிறியது. 

அதில் அந்த சவுண்டை கேட்ட போது,  ஒரு மிகப்பெரிய ட்ரெயின் அந்த ரூமை சுற்றி ஓடுவது போல இருந்தது. அந்த இசையை கேட்டுவிட்டு நான் மிரண்டு விட்டேன். எப்படி ரோஜா படத்தின் இசையை கேட்டு, நான் பிரமித்து போனேனோ, அதேபோல இந்த இசையை கேட்டும் நான் பிரமித்து போனேன். இதையடுத்து அப்பாடி நாம் சரியான ஆளிடம் தான் வந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். அவர் சிக்கு புக்கு கானா பாடலை அப்படியே வெஸ்டன் ஸ்டைலில் மாற்றி விட்டார். அதுதான் அவர் எனக்கு முதலில் கொடுத்த டியூன்" என்று பேசினார்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9