தொடர்ச்சியாக 4 ஃப்ளாப் படங்கள்.. சுத்தமா நடிப்பே வரல.. செட்டில் அசிங்கப்பட்ட விஜயகாந்த்.. சாட்சி சம்பவம் தெரியுமா?
தொடர்ச்சியாக 4 ஃப்ளாப் படங்கள் சுத்தமா நடிப்பே வரல.. செட்டில் அசிங்கப்பட்ட விஜயகாந்த்.. சாட்சி சம்பவம் தெரியுமா? - செந்தில்நாதன்!

சாட்சி திரைப்படத்தில் விஜயகாந்திற்கு ஏற்பட்ட அவமானம் குறித்தும், அதிலிருந்து அவர் வெளியே வந்தது குறித்தும், இயக்குநர் செந்தில் நாதன் மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
நடிக்கத்தெரியாமல் நின்ற விஜயகாந்த்
இது குறித்து அவர் பேசும் போது, ‘ அப்பொழுது விஜயகாந்திற்கு கிட்டத்தட்ட நான்கு படங்கள் தோல்வி அடைந்து இருந்தன. இதனால் அவர் படமே கிடைக்காமல் கிட்டத்தட்ட ஒரு வருடமாக ரூமிலேயே முடங்கி கிடந்தார். இந்த நிலையில்தான் எஸ்ஏ சந்திரசேகர் சார், சாட்சி என்ற படத்தை தொடங்கினார். அதில் விஜயகாந்தை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார்.
ஷூட்டிங் வந்த விஜயகாந்திடம் வழக்கம் போல டயலாக் பேப்பரை கொடுத்து, டயலாக்கை சொல்லுங்கள் என்று கூறிய பொழுது, அவரால் பழைய விஜயகாந்தாக மாறி, டயலாக்கை பேச முடியவில்லை. நடிப்பு சுத்தமாக வரவே இல்லை. ஒரு கட்டத்தில் படக்குழுவினர் விஜயகாந்த், இந்தக்கதைக்கு சரியாக வரமாட்டார்; அவருக்கு நடிப்பு வரவில்லை; ஆகையால் அவருக்கு பதிலாக அப்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த பிரபுவை கதாநாயகனாக போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
