Dhanush Health Condition: தனுஷ் உடல்நிலை.. உருட்டா இருந்தாலும் நியாயம் வேணாமா? விளாசும் சேகுவேரா
Dhanush Health Condition: தனுஷிற்கு படப்பிடிப்பின் போது நடந்த உடல்நலக்குறைவால் வெளிநாட்டு மரு்துவமனையில் சிகிச்ச பெற்று வருவதாக வெளியான தகவலுக்கு பத்திரிகையாளர் சேகுவேரா பதிலளித்துள்ளார்.
Dhanush Health Condition: நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படப்பிடிப்பின் போது நெருப்பில் நடந்த சண்டைக் காட்சியில் நடித்தார். அப்போது, வெளிவந்த புகை அவருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியதால் உடல்நிலை சரியில்லாமலே போய் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளார். இதனால் இப்போது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷின் உடல்நிலை குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கிங் உட்ஸ் டிவி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
எல்லாம் கட்டுக்கதை
அந்தப் பேட்டியில், தனுஷ் தனக்கு புகை என்றால் அலர்ஜி என எங்கே சொல்லி இருக்கிறார். அவர் இந்தப் படத்தில் தான் டூப் போடாமல் நடித்திருக்கிறார் என்றால் மற்ற எல்லா படத்திலும் டூப் போட்டு தான் நடித்திருந்தாரா?.
தனுஷூக்கு சண்டைக் காட்சியின் போது போது தீ விபத்து எல்லாம் ஏற்படவில்லை. அவர் கையில் ஆவி அடித்தது போல தீ பட்டுச் சென்றது. அந்த எரிச்சலும் சில நாட்களில் சரியாகிவிடும்.
தனுஷ் உடலில் தீக்காயங்கள் கூட பட்டிருக்கலாம். அந்த காயங்கள் அறிய உடன் மீண்டும் படத்தில் அதே காட்சியில் கூட நடிக்கலாம். ஆனால், இதனை சொல்வதை விட்டுவிட்டு தனுஷ் வெளிநாடு போயிட்டார் என சொல்வது எல்லாம் கட்டுக்கதை.
நியூ இயர் கொண்டாட யார் இருக்கிறார்?
தனுஷ் சிகிச்சைக்காக போனார் என்றார்கள், பின் நியூ இயர் கொண்டாட்டத்திற்கு சென்றார் என்றார்கள். இவர்களே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் குடும்பம் எல்லாம் இங்கு இருக்கும் போது, தனுஷ் யாருடன் வெளிநாட்டில் நியூ இயர் கொண்டாட போகிறார்.
நான் சொல்கிறேன் அவர் சென்னையில் தான் இருக்கிறார் என்று. அவர் வெளிநாடு பௌனதற்கு ஆதாரம் என்ன இருக்கிறது. இப்போதெல்லாம் எதாவது மேனஜர் இந்த தகவலை சொன்னார் என வலைப்பேச்சு குழு சொல்வதில்லை. காரணம் என்ன என்றால் அந்த மேனஜர் யார் என நாம் திரும்ப கேள்ழி கேட்கிறோம்.
சில நாட்கள் ஆகும்
ஒரு பெரிய தொழிற்சாலையிலோ அல்லது குப்பை மேட்டிலோ, தெருவிலோ படப்பிடிப்பு நடத்தினால் தான் ஒருவருக்கு புகையால் அலெர்ஜி வரும். ஆனால், தீயில் எந்த புழுதியும் இருக்காது. புகை மட்டும் தான் இருக்கும். அதனால், இது போன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். படப்பிடிப்பின் பேது ஏதேனும் தீக்காயம் பட்டால் அது குணமாக சில நாட்கள் ஆகும். அதுவரை படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார்.
டூப் போடாமல் நடிப்பதே மேல்
சினிமா நடிகர்கள் பலரும் தங்கள் படத்திற்காக மெனக்கெட்டு நடித்து வருகிறார்கள். அதற்கு தகுந்தாற் போல தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. இதனால் அதை பயன்படுத்தி ஒரு காட்சியை சிறப்பாக செய்யும் திறமை இங்கு இருக்கிறது.
நடிகர்களுக்கு சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடிப்பவர்களுக்கு 500, 1000 ரூபாய் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் நடிகர்கள் எடுத்தச் செல்கின்றனர். இதனால் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதே மேல்.
ஒரு நடிகரை காக்க பிடிக்க வேண்டுமானால் ஏதாவது நம்பும்படியான காரணத்தை கூறுங்கள். நீங்கள் உருட்டுவது கொஞ்சம் நம்புவதாக இருக்க வேண்டும் எனவலைப்பேச்சு யூடியூப் குழுவை தாக்கி உள்ளார்.
மேலும், எனக்கு வந்த தகவலின்படி, இட்லி கடை படம் பிரமாதமாக வந்திருக்கிறதாம். படத்தின் பெயர் ஒரு மாதிரி இருந்தாலும் படம் சூப்பராக இருக்கும் என கூறி வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்