Seetha Raman:மகாலட்சுமி சூழ்ச்சி.. வலையில் சிக்கிய சீதா; சீதாராமன் அப்டேட்!
சீதா ராமன் சீரியலின் இன்று நடக்கப்போகும் நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராஜசேகர், மதுமிதாவிடம் என் பொண்ணு சீதா வாழ்க்கையை கெடுத்து விடாதே என திட்டிய நிலையில், அதை பார்த்த சீதா மதுவுக்கு ஆறுதல் கூறுகிறாள்.
அடுத்து ஃபங்ஷனுக்கு தயாராக, மகாலட்சுமி மேக்கப் ஆர்டிஸ்ட்டை வரவைத்து சீதா மற்றும் மதுமிதாவுக்கு ஒரே மாதிரி மேக்கப் போட சொல்கிறாள். ஆனால் மதுமிதா மேக்கப் போட்டு கொள்ள மறுப்பு தெரிவிக்க, மகாலட்சுமி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள்.
பிறகு மகா யோசித்து ராமை அழைத்து அவனிடம் சீதாவிடம் சொல்லி மதுமிதாவை மேக்கப் போட்டுக்க சொல்லு என சொல்லி அனுப்ப, ராம் சீதாவிடம் விஷயத்தைச் சொல்கிறான். சீதா மதுமிதாவிடம் பேசி சம்மதிக்க வைத்து மேக்கப் போட்டு கொள்ள வைக்கிறாள்.
அதன் பிறகு ரிசப்ஷன் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்க விருந்தினர்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சிக்கு வருகின்றனர்.சீதா மற்றும் மதுமிதா என இருவரும் ஒரே மாதிரியான உடையில் ஒரே மாதிரி மேக்கப் போட்டுக் கொண்டிருக்க,வரும் விருந்தினர்கள் எல்லோரும் சீதாவை விட்டுவிட்டு மதுவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்த மகாலட்சுமி தன்னுடைய திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நல்லபடியாக நடக்கிறது என நினைத்து சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதாராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியை காண தவறாதீர்கள்.
டாபிக்ஸ்