சீமான் எஸ்ஜே சூர்யாவைத் தொடர்ந்து சிவக்குமார் குடும்பம்! பாராட்டு மழையில் அமரன்!
கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படாமனது இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மையான வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது.

கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படாமனது இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மையான வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது. இப்படத்தில் சாய் பல்லவி நடித்து இருந்தார். மேலும் இப்படத்தை நடிகர் கமல் ஹாசன் தயாரித்து இருந்தார். ரூ.150 கோடியைக் கடந்து வசூலை குவித்து வரும் அமரன் படத்தை பல பிரபலங்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இதயத்தை பிடிச்சு இழுக்குது - சீமான்
இயக்குனர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அமரன் படத்தை பார்த்துள்ளார். பின்னர் இயக்குனர் மற்றும் சிவகார்த்திகேயனை சந்தித்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "இந்த படம் இதயத்தை பிடிச்சு இழுத்துக்கிடுது. கடைசி 20 நிமிடத்தை பார்த்துட்டு அழுகாம யாரும் வெளியில வரமுடியாது. முகுந்தனாக நடிக்கும் வாய்ப்பு வரலாற்றில் என் தம்பி சிவகார்த்திகேயனுக்கு கிடைத்ததில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும், முகுந்தனாகவே என் தம்பியை பார்த்தேன். அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார்.
சாய் பல்லவி சும்மா ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலே பயங்கரமா நடிப்பாங்க, அப்படியிருக்கையில் இவ்வளவு கனமான கதாபாத்திரம் எனும்போது சிறப்பான பங்களிப்பை கொடுத்து நடிச்சிருக்காங்க. ஒரு சிறு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறந்த படைப்பை ராஜ்குமார் பெரியசாமி கொடுத்திருக்கிறார். இவருக்குள் இப்படியான திறமை இருக்கிறதா என படத்தை பார்த்து வியந்துபோய்டுவிங்க, அப்படியான படைப்பை கொடுத்திருக்கிறார்.